Skip to main content

தட்டிக்கேட்டால் வழக்கா..? என்னங்க சார் உங்க சட்டம்?

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

ஜனநாயகத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உலக அரங்கில் தனிச்சிறப்பு எப்போதுமே நம் இந்திய நாட்டுக்கு உண்டு. சமீப காலமாக, இந்தக் கூறுகளின் இருப்பு குறித்த சந்தேகம் பலருக்கும் எழுந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் மத துவேஷங்கள் பரப்பப்படுவதும், எதிர்க்குரல்களை தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்கப்பார்ப்பதும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும்தான் அந்த சந்தேகத்துக்கான காரணம். 

 

case filed on manirathnam for writing letter to modi

 

 

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆட்சியைப் பிடித்த சமயத்தில் பசு குண்டர்களால் கொல்லப்பட்ட பெஹுலுகான் தொடங்கி, சமீபத்தில் ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி சித்தரவதை செய்தே பிணமாக்கப்பட்ட தப்ரீஷ் அன்சாரி வரை எல்லாவற்றிற்குப் பின்னும் மதஅரசியல் வலுவாக பிணைந்திருக்கிறது. இஸ்லாமியர்களும், பட்டியலின மக்களும் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையைக் குறித்து வேதனைப் படுவதாக பிரதமர் மோடியே திருவாய் மலர்ந்தாலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாகத் திரிவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

இதையெல்லாம் எண்ணி வருந்தித்தான் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள், கும்பல் கொலைகளை இனியேனும் இந்த நாடு சகித்துக் கொள்ளக்கூடாது. உடனடியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், இந்த நாடு அதன் ஜனநாயக முகத்தை இழந்துவிடும் என பிரதமர் மோடிக்கு கூட்டாக கோரிக்கை கடிதம் எழுதினார்கள். 

 

case filed on manirathnam for writing letter to modi

 

அந்தக் கடிதத்தில், “நமது நாட்டில் சமீபகாலங்களில் நிகழ்ந்த பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு நாடு; இங்கு எல்லா பேதங்களைக் கடந்தும் அனைத்து மக்களும் சமம் என்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கான உரிமையை பெறவேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறோம்.

முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், அதில் ஈடுபட்டதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் வெகுசிலரே. 

'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதத்தின் பெயரால் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பழங்காலம் அல்ல. ராமரின் பெயருக்கு இம்மாதிரியான சம்பவங்களால் நேரும் அவப்பெயரை நீங்கள் தடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.  

 

case filed on manirathnam for writing letter to modi

 

ஜெய்ஸ்ரீராம் முழக்கமிடச் சொல்பவர்களால் நிகழும் வன்முறைகளைக் களையச் சொல்லும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, மீண்டும் பிரபலங்கள் சிலர் எழுதிய கூட்டுக்கடிதம் ஒன்று பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்தமுறை ஜெய்ஸ்ரீராம் முழக்கமிடுபவர்களுக்கு ஆதரவாக அது இருந்தது. கங்கனா ரனாவத், பிரஷூன் ஜோஷி, சோனால் மான்சிங் உள்ளிட்ட 61 பேர் எழுதி இருந்த அந்தக் கடிதத்தில், “ஜெய் ஸ்ரீராம் எனும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன. எல்லா வன்முறைகளுக்கும் இவர்களே காரணம் என்று சொல்வது தவறு” என குறிப்பிட்டிருந்தனர். 

பிரதமர் மோடி தனக்கு எழுதப்பட்ட இந்த இரண்டு கடிதங்களுக்குமே எந்தவித சலனத்தையும் காட்டவில்லை. கடந்த ஜூலை மாதம் இந்தக் கடிதங்கள் எழுதப்பட்ட நிலையில், தற்போது மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வழக்குப்பதிய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

case filed on manirathnam for writing letter to modi

 

தனது புகார் மனுவில், “தேசத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார்கள், சீரிய முறையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்புகிறார்கள் மற்றும் பிரிவினைவாதப் போக்குகளைக் கடைபிடிக்கிறார்கள்” போன்ற குற்றச்சாட்டுகளை இந்த 50 பிரபலங்களின் மீதும் சுமத்தியிருக்கிறார் சுதிர்குமார் ஓஜா. 

“கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுவதால் மக்கள் ’ஆண்டி இந்தியன்’ என்றும் ’அர்பன் நக்சல்ஸ்’ என்றும் அடையாளப் படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 19ஆவது பிரிவு குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கிறது. அதில் எதிர்ப்பு தெரிவிப்பதும் கூட அடங்கும்” என மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களும் தங்களது கடிதத்தில் அழுத்தமாகக் கூறியிருந்தனர். அதனாலேயே இன்று ஆண்டி இந்தியன்களாகவும், அர்பன் நக்சல்களாகவும் ஆக்கப்பட்டு, கூடவே வழக்கும் பதிந்திருக்கிறார்கள் அவர்களின் மீது. 

 


Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.