Skip to main content

மீண்டும் ட்ரெண்டான தமிழ்நாட்டு மீசை! தமிழகமும் மீசையும்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

கடந்த மூன்று நாட்களாக இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் ஒலிக்கும் பெயர் 'அபிநந்தன் வர்தமன்'.

 

abinandhan



கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானங்களுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லைக்குள் விமானத்தில் சென்ற அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கினார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஒருவர் அபிநந்தனை விசாரிக்கும் வீடியோவில் பாகிஸ்தான் ராணுவம் தன்னை நாகரிகமாக நடத்துவதாகத் தெரிவித்திருந்தார் அபிநந்தன். அந்த வீடியோவில் அவர்களது கேள்விகளுக்கு அபிநந்தன் பதிலளித்த விதமும், அந்த சூழ்நிலையை அபிநந்தன் அணுகிய முறையும் அவர்கள் கேட்கும் தகவல்களை தர உறுதியாகவும் மென்மையாகவும் மறுத்த விதமும் இந்தியா முழுக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

abinandhan pics



பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் தனி ஆளாக இருக்கும்போதிலும், தன் கண்கள் கட்டப்பட்டு, தாக்கப்பட்டதில் முகத்தில் காயம் ஏற்பட்டு நிற்கும்போதும் அவர் சற்றும் நிலைகுலையாமல் நிமிர்ந்து நின்ற விதமும் அவர்கள் கேட்ட கேள்விகளில் எந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், எந்த கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது என்பதில் காட்டிய தெளிவும் அதை மிக மென்மையாக அதே நேரம் உறுதியாக தெரிவித்த விதமும் அந்த வீடியோக்கள் மூலம் வெளியாகின. அவர் ஆங்கிலம் பேசிய விதம், அளவான வார்த்தைகள் என அவரது மொழியும் மிகத் தெளிவாக இருந்தன. குறுகிய நேர வீடியோக்கள் என்றாலும் தனது செயல்பாடு மற்றும் பேச்சால் மக்கள் மத்தியில் ஒரு நாயகனாக உயர்ந்தார் அபிநந்தன். அவரது அந்த பிம்பத்திற்கு வலு சேர்த்தது அவரது மீசை. தமிழ்நாட்டை சேர்ந்த அபிநந்தன் தமிழ்நாட்டு பாணியில் நீண்ட பெரிய மீசை வைத்திருந்தார். சமூக ஊடகங்களில் அவரது அந்த 'கெத்'தான தோற்றம் குறித்தும் பேசப்பட்டது. பாகிஸ்தானால் அமைதி நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன் பத்திரமாக மீண்டு வந்திருக்கும் வேளையில் அவரை புகழ்ந்தும் வரவேற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் நிறைந்துள்ளன.

 

barathiyar jeyakanthan



அபிநந்தனை அவரது பேட்சில் (batch) 'வீரப்பன்' என்று சக வீரர்கள் அழைப்பார்களாம். காரணம், அவரது நீண்ட மீசை. வீரப்பன் பெரிய மீசை வைத்திருந்தவர். ஆனால், இரண்டும் வேறு வேறு பாணி.

 

veerappan



தமிழகத்துக்கும் பெரிய மீசைக்கும் இருக்கும் தொடர்பு அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தென் தமிழகத்தில் பெரிய மீசை வைப்பவர்கள் அதிகம். வீரத்தின் அடையாளமென நம்பப்படும் இந்த மீசை பல பிரபலங்களின் அடையாளமாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவம் பெரிய மீசையுடன்தான் வரையப்பட்டது. திரைப்படத்தில் அந்தப் பாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசன் பெரிய மீசையுடன்தான் நடித்தார். இன்று அவரது தோற்றமே கட்டபொம்மனின் தோற்றமாக பதிவாகி இருக்கிறது. பாரதியின் மீசை புகழ் பெற்றது. அவரது கவிதையில் இருக்கும் ரௌத்திரம் அவரது தோற்றத்திலும் இருக்கக் காரணம் அந்த மீசை. எழுத்தாளர் ஜெயகாந்தனின் பெரிய மீசை அனைவரையும் ஈர்த்தது.

 

rajini kamal ajith



இன்றும் தமிழ் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகர்களை வீரமாகக் காட்ட மீசை பயன்படுகிறது முன்பு தேவர் மகன், சீவலப்பேரி பாண்டி திரைப்படங்களும் சமீபத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களும் இதற்கு உதாரணம்.

 

nakkheeran gopal



நக்கீரன் ஆசிரியர் தோற்றத்தில் முக்கிய அம்சம் மீசை. அவரது அடையாளமாக இன்றும் அவரது மீசை இருக்கிறது. இப்படி தமிழகத்துக்கும் பெரிய மீசைக்கும் தொடர்புண்டு. இந்த வரிசையில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக அபிநந்தனின் மீசை இந்தியா முழுவதும் ட்ரெண்டாகி உள்ளது. அவரை பாராட்டும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ஓவியங்களில், புகைப்படங்களில் அவரது மீசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஹைலைட்டாக இருக்கிறது. மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது தமிழ்நாட்டிலிருந்து ஒரு மீசை.

         

 

Next Story

இப்ப வேதாளம்.. நெக்ஸ்ட் தூக்கு துரை.. - அஜித்தை விடாத சிரஞ்சீவி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

chiranjeevi next is ajith viswasam movie remake

 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலா ஷங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

 

சமீபகாலமாக ரீமேக் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சிரஞ்சீவி விஜய் நடித்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர் 150' என்ற தலைப்பிலும், மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' படத்தை 'காட்ஃபாதர்' என்ற தலைப்பிலும் தெலுங்கில் ரீமேக் செய்தார். அந்த வகையில், தற்போது அஜித்தின் 'வேதாளம்' பட ரீமேக்கை தொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'விஸ்வாசம்' படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை 'கைதி நம்பர் 150' இயக்கிய வி.வி.விநாயக் இயக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

 

Next Story

”மரியாதைக்காக செய்தால்கூட அதை அஜித் விரும்பமாட்டார்” - அஜித் குறித்து நெகிழ்ந்த வெள்ளப்பாண்டி

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

 Vellai Pandi

 

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, அஜித்துடனான விஸ்வாசம் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”விஸ்வாசம் படத்தில் அஜித் சாருக்கு அப்பாவாக நடித்திருந்தேன். என் வாழ்க்கையில் சொந்த அப்பாவிடம்கூட நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகியதில்லை. ரொம்ப எளிமையான மனிதர். மிகவும் பாசக்கார பையன். தலைக்கணம் இல்லாத ஈவிரக்கம் கொண்ட மனிதர். அவங்க ஷாட் முடிந்த உடனே எல்லோரும் கேரவனுக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், அஜித் நம் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார். அவர் பக்கத்தில் வரும்பொழுது மரியாதைக்காக எழுந்து நின்றால்கூட, நீங்கள் அப்பா, நான் பையன், நீங்கள் போய் எழுந்து நிற்கலாமா என்பார். 

 

ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் கையாலே அனைவருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுப்பார். நிறைய பேருடன் சேர்ந்து நடித்திருந்தாலும் அஜித்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது”. இவ்வாறு வெள்ளப்பாண்டி தெரிவித்தார்.