Skip to main content

''கீப் கோயிங் கலெக்டர் சார்..!'' - மாவட்ட ஆட்சியரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020
gds

 

கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை 11,000த்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையே சமீபத்தில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவானதற்கு நடிகர் கார்த்தி பாராட்டிய நிலையில், தற்போது இதேபோல் திருப்பூர் மாவட்டமும் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சமூகவலைதளத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்... ''இது தொடரட்டும் கலெக்டர் சார். இதற்காக அயராது உழைக்கும் ஒவ்வொருவரும் நமது மரியாதைக்கு தகுதியானவர்கள்'' என வாழ்த்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹிட் பட நடிகரின் அடுத்த படம் - வெளியிட்ட முன்னணி பிரபலங்கள் 

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
sivakarthikeyan released the siddharth next movie

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சித்தார்த் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், போஸ்டரை சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் மற்றும் மாதவன் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

sivakarthikeyan released the siddharth next movie

இப்படத்தை ராஜேசகர் இயக்குகிறார். படத்திற்கு ‘மிஸ் யூ’ (Miss You) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதாநாயாகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே அதர்வாவின் பட்டத்து அரசன் படத்தில் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார். இதையடுத்து இப்படத்தில் நடிக்கிறார். மேலும் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

Next Story

குட் நியூஸ் சொன்ன சிவகார்த்திகேயன்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
sivakarthikeyan third baby update

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்தாக வெங்கட் பிரபு, ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் ஒரு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற அவரது மாமா மகளை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும் குகன்தாஸ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் ஆராதனா, சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை பாடி பலரது கவனத்தைப் பெற்றார். 

இந்த நிலையில் சிவகார்த்தியேன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.