Skip to main content

எமோஷனலாக பேசி மேடையில் கண்கலங்கிய சித்தார்த்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

siddharth get tears while speaking about chiththa telugu release

 

அருண்குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. கடந்த மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சினிமா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னடத்தில் வெளியான போது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த சித்தார்த்துக்கு காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அது சர்ச்சையானதை தொடர்ந்து கன்னட மக்கள் சார்பாக நடிகர்கள் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டனர். 

 

இதனிடையே தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீஸாகவிருந்து சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்த நிலையில் சின்னா என்ற பெயரில் வருகிற 6ஆம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இதற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்த நிலையில் அதில் பேசிய சித்தார்த் படம் தாமதமானதற்கான காரணத்தை பகிர்ந்திருந்தார். மேலும் ஒரு கட்டத்தில் எமோஷனலாக பேசி கண்கலங்கிவிட்டார். 

 

அவர் பேசியது, "இப்படம் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 'சித்தார்த்தின் படங்களை யார் வந்து பார்ப்பார்கள்? என பலர் கேட்டனர். நான் நல்ல படம் பண்ணினால் மக்கள் பார்க்க வருவார்கள் என்று சொன்னேன். இதன் காரணத்தால் செப்டம்பர் 28 அன்று வெளியாகியிருந்த இப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. சினிமா மீது நம்பிக்கை இருந்தால், சினிமாவை ரசிப்பவராக இருந்தால், தயவுசெய்து சின்னா படத்தை சென்று பாருங்கள். அதைப் பார்த்துவிட்டு, சித்தார்த்தின் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று உங்களுக்குத் தோன்றினால், இந்த மாதிரி பிரஸ் மீட் எதுவும் நடத்த மாட்டேன்" என கண்கலங்கிய படி பேசினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிதி ராவுடன் திருமணமா? - புகைப்படத்துடன் தெளிவுபடுத்திய சித்தார்த்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
siddharth calrifies on his marrige news to aditi rao

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் நேற்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் சித்தார்த் - அதிதி ராவ் தரப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.  

siddharth calrifies on his marrige news to aditi rao

இந்த நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிதி ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அவள் ஒப்புக்கொண்டாள். நிச்சயதார்த்தம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் இருவருக்கும் நிச்சயம் முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தார்த், 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

திருமணம் செய்து கொண்ட சித்தார்த் - அதிதி ராவ்?

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
siddharth aditi rao marriage

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்ததாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாத சூழலில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த் 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவ்வும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.