Skip to main content

'ராதே ஷ்யாம்' படத்தால் நடந்த விபரீதம் - பிரபாஸ் ரசிகர் தற்கொலை

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

radhe shyam movie review prabhas fans suicide

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் 'ராதே ஷ்யாம்'.  இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய இப்படத்திற்கு இந்திய முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 11ஆம் தேதி வெளியாகி இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் இப்படம் தெலுங்கைத் தாண்டி மற்ற மொழிகளில் வரவேற்பைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் பிரபாஸ் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த முத்யால ரவி தேஜா (24) என்பவர் ராதே ஷ்யாம் படத்தை பார்த்திருக்கிறார். அதன் பின் படம் தொடர்பாக வெளிவந்த கலவையான விமர்சனங்கள் குறித்து தனது தாய் மற்றும் நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து  கவலையில் இருந்த முத்யால ரவி தேஜா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்