Skip to main content

"உதவி தேவைப்படுபவர்கள் எங்களை தொடர்புகொள்ளலாம்" - சிம்பு பட நடிகை அறிவிப்பு!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

sdsdsd

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும், சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில், சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தின் நாயகி நடிகை நிதி அகர்வால் distributelove.org என்ற இணையதளத்தின் மூலம் மக்களுக்குத் தான் உதவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..

 

"எல்லோருக்கும் வணக்கம்,

 

நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக நம்புகிறேன்,

 

ஊரடங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நான் அறிவேன். இந்த சவாலான காலங்களில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். முடிந்தவரை எல்லா வழிகளிலும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். distributelove.org என்ற இணையதளம் மூலம் ஆதரவின்றி கஷ்டப்படும் குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு முயற்சியைக் கையிலெடுத்துள்ளோம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் தங்கள் விவரங்களை இந்த தளத்தில் பூர்த்திசெய்து எங்களைத் தொடர்புகொள்ளலாம். எங்கள் குழு விரைவில் உங்களை அணுகும். எதுவும் நீண்டகாலம் நீடிக்காது. கரோனா வைரஸ் கூட அப்படித்தான். எனவே வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். கடுமையாகப் போராடுங்கள். அனைவருக்கும் நிறைய அன்பும் பலமும் சேரட்டும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கலகலப்பான தலைவன்" - உதயநிதிக்கு சீனு ராமசாமி வாழ்த்து

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Kalaga Thalaivan release date announced

 

உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இந்நிலையில் 'கலகத் தலைவன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, "நவம்பர் 18ல் திரை தொடும் என் கலகலப்பான (கலகத்) தலைவனுக்கு  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ளார். 

 

 

Next Story

'கலகத் தலைவன்' ஆனார் உதயநிதி ஸ்டாலின்!

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

udhayanidhi stalin next movie Kalagathalaivan

 

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. 

 

ad

 

இதையடுத்து தடம், மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடித்து வந்தார். இதை அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடித்து அடுத்தக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'கலகத் தலைவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் மும்பையை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஃபகத் பாசில், வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.