Skip to main content

'இப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை' - மகிமா நம்பியார் 

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
mahima nambiyar

 

 

 

'சாட்டை' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மகிமா நம்பியார் குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து அவர் தற்போது விக்ரம் பிரபுவுடன் 'அசுரகுரு', அட்டகத்தி தினேசுடன் 'அண்ணனுக்கு ஜே', ஜி.வி.பிரகாசுடன் 'ஐங்கரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மகிமா நம்பியார் தன் சினிமா பயணதில் வரும் கிசுகிசுக்கள் குறித்து பேசும்போது.... "நான் ரொம்ப நல்ல பெண். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போய்விட்டால் நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பேன். அது போல் நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பது தப்பு கிடையாது. ஆனால் இப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை. அதனால் தான் என்னைப்பற்றி கிசுகிசு ஏதும் வரவில்லை. எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். அடுத்து எம்.பில், பி.எச்டி, நெட் தேர்வுன்னு பிளான் பண்ணிருக்கேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பு தான் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம்" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்