Skip to main content

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா தொற்று உறுதி 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

keerthy suresh tested positive covid19

 

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

 

அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அனைவரும் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்