Skip to main content

"செல்வராகவனின் எண்ணம் மிகப்பெரியது" - ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து ஜி.வி.பிரகாஷ்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

gv prakash about aayirathil oruvan 2

 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது விக்ரமின் 'தங்கலான்', தனுஷின் 'கேப்டன் மில்லர்', கார்த்தியின் 'ஜப்பான்' என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே ஹீரோவாகவும் 'அடியே', 'டியர்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.   

 

இந்நிலையில் தனது முதல் இசை நிகழ்ச்சியை வருகிற 27ஆம் தேதி கோவையில் நடத்தவுள்ளார். 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஜி.வி.பிரகாஷ். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "அது ரொம்ப பெரிய பட்ஜெட் படம். தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லிருக்காங்க. நடந்துச்சுனா பெரிய சந்தோசம் தான். நானும் ஆர்வமாக காத்திருக்கிறேன். செல்வராகவன் சாரின் எண்ணம் மிகப் பெரியது. வரலாற்றையும் ஃபேண்டசியும் கலந்து அழகாகக் கையாண்டிருந்தார். அந்த வகையில் அவரது அடுத்த வெர்ஷன் எப்படி இருக்கும் என்பதில் நானும் ஆர்வமாகத் தான் இருக்கிறேன்" என்றார். 

 

கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. செல்வராகவன் இயக்கியிருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை எனக் கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் இசையும் பரவலாகப் பாராட்டப்பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் அதில் தனுஷ் நடிப்பதாகவும் கடந்த 2021ஆம் ஆண்டு புத்தாண்டன்று அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்