Skip to main content

"அம்மாவை இழந்தவர்களுக்கு இந்த பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும்" - 'கணம்' பட இயக்குநர் பேச்சு 

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

director Shree Karthick talk about kanam movie mother song

 

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி நடிகர் சர்வானாந்த் நடிக்கும் கணம்  படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்  வெளியாக உள்ள இப்படத்தின் அம்மா பாடலை படக்குழு நேற்று (26.1.2022) வெளியிட்டது. உமா தேவியின் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடல் கேட்பவர்களை கவர்ந்து வருகிறது. 

 

இப்பாடல் குறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், "அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன். 3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம். இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு  இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது. 'மன்னன்’ படத்தில் வந்த 'அம்மா என்றழைக்காத…’, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை  தரும் பாடலாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
karthi pays tribute to vijayakanth in his memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மற்றும் மலை வளையம் வைத்து மரியாதை செய்தனர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த தினத்தன்று கார்த்தி உருக்கமுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Next Story

‘ஜப்பான்’ ரிலீஸ் தேதி அப்டேட்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

japan release date update

 

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. கார்த்தியின் 25வது படம் என்பதால் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஆர். பிரபு, "ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரை திட்டமிட்டுள்ளோம். கார்த்தியின் 25வது படமென்பதால் அவரது திரைப் பயணத்தில் பயணித்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், அவரது குடும்பங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். 

 

தீபாவளி என்பதால் ரசிகர்களின் வரவேற்பு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். காலை 9 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகிறது. இந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த நக்கல் படமாக இருக்கும். அரசியல் படம் கிடையாது. குடும்பத்தோடு வந்து ஜாலியாக சிரித்து மகிழும்படி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதற்குள் ராஜு முருகன் ஸ்டைலில் ஒரு சின்ன கருத்தும் இருக்கும். எல்லா அம்சங்களும் இருக்கும். ஆனால் முகம் சுளிக்கிற வன்முறை இருக்காது" என்றார்.