Skip to main content

"ஹீரோயினுடன் பேச வைத்தால் ஜாலியாக இருக்கும் " - இணையத்தில் வைரலாகும் பிரபுவின் பேச்சு !

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

actor prabhu finished dubbing kaathu vaakula rendu kadhal movie

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

 

ad

 

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில், நடிகை நயன்தாரா ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டப்பிங் பணியை நேற்று (02.12.2021) தொடங்கிய நிலையில், தற்போது நடிகர் பிரபுவும் தனது டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், காஃபி குடித்துக்கொண்டு, “என்னப்பா தனியா டப்பிங் பேச வைக்கிறீங்க, ஹீரோயினுடன் டப்பிங் பேச வைத்ததால்தான் ஜாலியாக இருக்கும்” என்று நடிகர் பிரபு விளையாட்டாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா பாடல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்” - குஷ்பு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
kushboo about ilaiyaraaja

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.  

கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Next Story

வாழ்த்து மழையில் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023

 

 

 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சிவாஜி கணேசனின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரஜினி, கமல், நாசர், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், ஷாலினி அஜித்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.