Skip to main content

சிவபுரத்திலிருந்து நியூயார்க்கிற்கு கடத்தப்பட்ட கடவுள் சிலை; மீட்கப்பட்டது எப்படி? - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 07

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 07

 

சிலை கடத்தல் என்பது பல காலமாக நிகழ்ந்து வரும் ஒரு குற்றம். அப்படிப்பட்ட குற்றம் நிகழ்ந்த பரபரப்பான ஒரு வழக்கு பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விவரிக்கிறார்.

 

1961 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மியூசியத்தில் அதிகாரியாக இருந்த டாக்டர் டக்ளஸ் பரே கும்பகோணத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவபுரத்திற்கு வந்தார். சிவதலங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யும் ஒரே தலம் சிவபுரம் தான். பல்வேறு வித்தியாசமான நம்பிக்கைகளால் சிவபுரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக விளங்கி வருகிறது. 'தென்னிந்திய சிலைகள்' என்கிற தலைப்பில் டக்ளஸ் பரே ஒரு புத்தகம் எழுதி வந்தார். அந்தப் புத்தகத்தை எழுதி முடித்து 1965 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

 

சிவபுரத்தில் உள்ள நடராஜர் சிலை ஒரு போலியான சிலை என்று தன்னுடைய புத்தகத்தில் டக்ளஸ் குறிப்பிட்டார். அந்தத் தகவலில் உண்மை இருக்கிறதா என்று விசாரிக்கப்படுகிறது. ஒரிஜினல் சிலையின் படங்களோடு அப்போது இருந்த சிலையை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் வேறுபாடுகள் தெரிந்தன. டக்ளஸ் அவர்கள் சொன்னது உண்மைதான் என்பதை அனைவரும் உணர்ந்தனர். தமிழ்நாடு அரசு இந்த வழக்கை விசாரித்தது. கிருஷ்ணராஜூ என்கிற சிபிசிஐடி டிஐஜி விசாரணைக்கு தலைமை ஏற்றார்.

 

சிவபுரத்தின் சிலை நியூயார்க்கில் இருக்கிறது என்கிற தகவல் கிடைத்ததால் இவர்களோடு சிபிஐ அதிகாரிகளும் இணைந்து நியூயார்க் சென்றனர். அங்கு சந்தேகத்துக்குரிய நபர் எந்தத் தகவலையும் தர மறுத்தார். இதனால் விசாரணை ஒரு தேக்க நிலையை அடைந்தது. ராமகிருஷ்ணன் என்கிற டிஎஸ்பி இன்னொரு பக்கம் விசாரணையைத் தொடர்ந்தார். வெளிநாடுகளிலும் சோதனை தொடர்ந்தது. அப்போது சில விஷயங்களை ராமகிருஷ்ணன் கண்டுபிடித்தார்.

 

1951 ஆம் ஆண்டு கஸ்தூரிரங்க ஐயங்கார் என்பவரின் நிலத்தை அன்னமுத்து படையாட்சி என்பவர் சீர்செய்து கொண்டிருந்தபோது அவருக்கு ஆறு சிலைகள் கிடைக்கின்றன. அந்த சிலைகள் சட்டப்படி கும்பகோணம் தாசில்தார் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஊர் மக்களும் முக்கியஸ்தர்களும் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று அந்த சிலைகள் தங்களுக்கு வழிபடுவதற்காக வேண்டும் என்று கேட்டனர். அதன்பிறகு ஆறு சிலைகளையும் செம்மைப்படுத்துவதற்காக ராமசாமி என்பவரிடம் ஒப்படைத்தனர்.

 

பக்கத்து ஊரில் இருந்த திலகர், தாஸ் என்கிற சகோதரர்கள் கலைப் பொருட்களை விற்று சம்பாதிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். இந்த சிலைகள் குறித்து அறிந்த பிறகு, இது போன்றே புதிய சிலைகளைச் செய்து கோவிலுக்குக் கொடுத்துவிட்டு, பழைய சிலைகளை விற்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து ராமசாமியிடம் கூறினர். அவர் முதலில் மறுத்தார். ஒருகட்டத்தில் பணத்தாசை காட்டி அவரை சம்மதிக்க வைத்தனர். 1956 ஆம் ஆண்டு புதிய சிலைகளை தாஸ் வசம் ஒப்படைத்தார் ராமசாமி. 

 

அவற்றை வெளிநாட்டில் விற்றனர் சகோதரர்கள். அந்த சிலைகள் வெளிநாட்டிலேயே தங்கிவிட்டன. அந்த சிலைகள் இரண்டாகவும் மூன்றாகவும் வேறு வேறு நபர்களிடம் செல்கின்றன. அதிகாரிகள் துரத்திக்கொண்டே இருப்பதால் பென் ஹாலர் என்பவர் நடராஜர் சிலையை கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் நியூ சைமன் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு விற்று விடுகிறார். அந்த சிலையை காட்சிப்படுத்தக் கூடாது என்று இந்தியாவிலிருந்து வழக்கு தொடுக்கப்படுகிறது. அவர்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்தினர். இந்த இடைவெளியில் சிலையை செம்மைப்படுத்த லண்டனில் உள்ள ஒரு பெண்மணியிடம் அனுப்பினர்.

- தொடரும்

 

 

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.