Skip to main content

ஒரே வீட்டில் 6 பேரைக் கொன்ற பெண் சீரியல் கில்லர் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 03

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 Thilagavathi IPS (Rtd) Thadayam : 03

 

சீரியல் கில்லர் என்கிற பதத்தை நாம் ஆண்களோடு தான் இதுவரை தொடர்புபடுத்தியிருப்போம். ஆனால் கேரளாவில் ஒரு பெண் சீரியல் கில்லராக இருந்து பல கொலைகளைச் செய்துள்ளார். அந்த வழக்கு குறித்து நம்மிடம் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

ஜாலி ஜோசப் என்கிற கேரளப் பெண் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே கொலை செய்தது பற்றிய கதை இது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர். சின்ன வயதில் சிறுசிறு தவறுகள் செய்து ஒழுக்கவாதியான தன் தந்தையிடம் பலமுறை அடி வாங்கியிருக்கிறார். பள்ளியில் திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். அனைவரிடமும் இயல்பாகப் பழகுபவர் போல் தெரிந்தாலும் மனதுக்குள் கொடூரமான எண்ணங்களையும் திட்டங்களையும் வைத்திருப்பவர்களை சோசியோபாத்  என்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராக இந்தப் பெண் இருந்திருக்கிறார். கோழிக்கோடு பகுதிக்கு ஒரு திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது ராய் தாமஸ் என்கிற நபரோடு காதல் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கூடத்தாய் என்கிற பகுதிக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ வந்தாள் அந்தப் பெண். முதலில் இப்படி ஒரு மருமகள் நமக்கு வாய்த்தாளே என்று பெருமைப்படும் வகையில் இவளுடைய நடவடிக்கைகள் இருந்தன. குடும்பத்தின் நிர்வாகம் அனைத்தும் மாமியாரின் வசம் இருந்தது. மாமியார் இல்லாமல் போனால் அனைத்தும் நம் வசம் வந்துவிடும் என்று இவள் எண்ணினாள். 

 

மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாமியாருக்கு ஜாலி மட்டன் சூப் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன் மயங்கி விழுந்த மாமியார் மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக இருக்கும் என்று அனைவரும் நினைத்தனர். அதன்பிறகு மாமனாரோடு நெருக்கமானாள் ஜாலி. நெல் வயலை விற்று 15 லட்ச ரூபாயை ஜாலியிடம் கொடுத்தார் மாமனார். இதன்பிறகு வீட்டை உரிமை கொண்டாடக்கூடாது என்றும் கூறினார். இன்சூரன்ஸ் பாலிசியிலும் ஜாலியை நாமினியாகச் சேர்த்தார். இதனால் தாமசுக்குத் தன் தந்தை மேல் கோபம் ஏற்பட்டது. ஆறு வருடம் கழித்து ஒருநாள் இரவு கப்பைக் கிழங்கு செய்து மாமனாருக்கு சாப்பிடக் கொடுத்தாள் ஜாலி. அதை உண்ட பிறகு அவர் மயங்கி விழுந்தார். பக்கத்து வீட்டுக்குத் தகவல் தெரிவித்தாள் ஜாலி. அவர்கள் வந்து பார்ப்பதற்குள் மாமனாரின் உயிர் பிரிந்தது. வயதானதால் மரணம் ஏற்பட்டது என்று அனைவரும் நம்பினர். சில வருடங்கள் கழித்து ராய் தாமஸ் புட்டும் கடலைக் கறியும் சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்தார். 

 

இவர்களுடைய வீட்டுக்கு அருகில் மாமியாரின் தம்பி வசித்து வந்தார். அவருக்கு சந்தேகம் வந்தது. தாமஸ் என்ன சாப்பிட்டார் என்று கேட்கும்போது ஒன்றுமே சாப்பிடவில்லை என்று கூறினாள் ஜாலி. அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்த தன்னுடைய சகோதரரை அழைத்து இங்கு வரச் சொன்னார். போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். போஸ்ட்மார்ட்டம் செய்தபோது தான் தெரிந்தது சைனைட் சாப்பிட்டு தான் அவர் இறந்தார் என்று. அப்போதும் தானாக சைனைட் சாப்பிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தான் ஜாலி வாதிட்டாள். ராய் இறந்த சில வருடங்களுக்குப் பிறகு மாமியாரின் தம்பியும் இறந்து போனார். ஜாலி போட்டுக் கொடுத்த காபியைக் குடித்து அவர் இறந்தார்.

 

இந்த மரணத்திற்குப் பிறகு அருகில் வசித்து வந்த மாமியாருடைய கொழுந்தனார் மகன் குடும்பத்தில் ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜாலி செல்கிறாள். அங்கு ஞானஸ்தானம் வழங்கும் பையனின் ஒன்றரை வயது சகோதரி இறந்து போகிறாள். அந்தக் குழந்தைக்கு ஜாலி தான் பிரட் சாப்பிடக் கொடுத்திருக்கிறாள் என்பது அதன்பின் தெரிந்தது.


 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.