Skip to main content

அனில் கும்ப்ளேவுக்கு வாழ்த்து கூறிய யுவராஜ்சிங்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

Yuvraj Singh

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளேவுக்கு, யுவராஜ்சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவருக்கு விராட் கோலி, சேவாக், ஐசிசி, பிசிசிஐ உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அனில் கும்பிளேவுக்கு வாழ்த்து தெரிவித்து யுவராஜ்சிங் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவினைப் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர், "எப்போதெல்லாம் நான் உத்வேகம் தேவையென நினைத்தேனோ, அப்போதெல்லாம் எனக்கு உத்வேகம் அளித்தவர். பிறந்தநாள் வாழ்த்துகள் அனில் கும்ப்ளே. இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் அளித்த பங்களிப்பும், இளம் வீரர்களை உருவாக்குவதில் நீங்கள் அளித்த பங்களிப்பும் விலைமதிப்பில்லாதது. வயதில் அரைசதம் கண்ட இந்நாளில், எனது அன்பையும், வாழ்த்துகளையும் உங்களுக்கு அனுப்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

அரசுப் பேருந்தில் பயணித்த கும்பளே!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

anil kumble travelled in government bus

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் கடந்த ஜூன் 11ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு சக்தி திட்டம் என்று பெயரிடப்பட்டு அதற்கான அடையாள அட்டையை கர்நாடகா அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.

 

இந்த நிலையில், தங்களது 28 கோரிக்கைகளை அரசுப் போக்குவரத்துத் துறை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து நேற்று (11-09-2023) மாநிலம் முழுவதும் கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது. இது குறித்து, தனியார் போக்குவரத்து ஊழியர்கள்  இந்த சக்தி திட்டத்தால் தாங்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று கூறினர். பின்னர், ஜூலை 24 மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் கலந்து பேசினர். அப்போது, செயலி மூலம் இயங்கும் வாகன சேவைகளையும் நிறுத்த வேண்டும் என 30 கோரிக்கைகளை வைத்தனர். அதற்கு அமைச்சர், தனியார் போக்குவரத்து சங்கங்களின் 30 கோரிக்கைகளில் 28 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அரசுத் தரப்பிடம் பதில் தரப்படாததால் நேற்று கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின்  கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது.

 

இந்நிலையில், நேற்று கர்நாடகாவுக்கு வந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே தனது வீட்டிற்கு செல்ல அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூரில் டாக்ஸிகள் இயங்காததால், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய பயணிகளுக்கு வீடு திரும்ப வாகனம் கிடைக்காத சூழல் உருவானது. இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அணில் கும்ப்ளே, விமான நிலையத்தில் இருந்து பனசங்கரி வரை மாநகர போக்குவரத்து கழக பஸ்சில் பயணித்துள்ளார். இது குறித்த அணில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்திலிருந்து இன்று பிஎம்டிசி பஸ்ஸில் வீடு திரும்பினேன்” என பேருந்தில் பயணித்த புகைப்படத்தை பகிர்ந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

yuvraj singh with father yograj joins kamal in indian 2 movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (01.11.2022) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் நடிகருமான யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

யோக்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆறு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். பின்பு கிரிக்கெட்டிலிருந்து விலகி பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.