Skip to main content

ஜோ ரூட்டை வீழ்த்தி விருது வென்ற ரிஷப் பந்த்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021
rishabh pant

 

சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஒரு ஆண்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம், மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களைப் பாராட்டும் வகையில், மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ஜனவரி மாதத்திலிருந்து வழங்க முடிவுசெய்தது.

 

இந்த விருதுக்கு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றக் காரணமாய் விளங்கிய இந்திய வீரர் ரிஷப் பந்த், இலங்கையுடனான போட்டியில் சிறப்பாக விளையாடி ரன் குவித்த ஜோ ரூட், ஜனவரி மாதம் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி மூன்று சதம் அடித்த, அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

 

தற்போது இந்த விருதுக்கு இந்திய வீரர் ரிஷப் பந்த், தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூத்த விளையாட்டு ஊடகவியாளர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் (icc hall of fame) இடம்பெற்றவர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும், கிரிக்கெட் ரசிகர்களும் வாக்களித்து இந்த விருதுக்கு ரிஷப் பந்தை தேர்வுச் செய்துள்ளனர்.