Skip to main content

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

jhk

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. 

 

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-ஆவது ஐ.பி.எல் தொடர் கடந்த 19-ஆம் தேதி அமீரகத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. ஐ.பி.எல் நடைபெறுமா என்பது குறித்து பெருத்த சந்தேகம் நீடித்து வந்த நிலையில், ஐ.பி.எல் தொடர் அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேலும் தோனியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு, தோனி தற்போது களம் கண்டுள்ளார். முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது. தற்போது டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.