Skip to main content

முதல் தோல்வியை சந்தித்தது இந்தியா!

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

பர்மிங்ஹாமில் இன்று நடந்துவரும் இந்தியா இங்கிலாந்து இடையிலான உலக கோப்பை போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.

India  first defeat


இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களையும், ஸ்ட்ரோக்  79 ரன்களையும், ஜேசன் ராய் 66 ரன்களையும் எடுத்தனர். இந்நிலையில் அடுத்து களமிறங்கும் இந்திய அணி 338 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

 

சார்ந்த செய்திகள்