Skip to main content

நாளிதழில் 15 பக்கங்களுக்கு இறப்பு செய்தி... அதிர்ச்சியை அடைந்த மக்கள்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.7  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 18,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  gh



அமெரிக்காவில் கரோனா அதீத வேகத்தில் பரவி வருகின்றது. தற்போது வரை 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதால் அந்நாடு என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து வருகின்றது. இதற்கிடையே அமெரிக்காவில் வெளிவரும் பாஸ்டன் குளோப் பத்திரிகையில் முதல் 15 பக்கங்களுக்கு இறந்தவர்களின் செய்தி இடம்பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்