Skip to main content

“தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மனம் பேதலித்து உள்ளது..” - பெண் டி.எஸ்.பியின் உருக்கமான கடிதம்! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Woman DSP Letter to DGP

 

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு காவல் நிலைய பகுதியில் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இங்கு துணை சூப்பிரண்டாக பணியில் உள்ளவர் சந்தியா(28). இவர், நேரடி டிஎஸ்பி ஆக கடந்த ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். 


கோவை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், தற்போது திருச்சி மாவட்டம் நாவல்பட்டு பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தமிழக டி.ஜி.பிக்கு டி.எஸ்.பி சந்தியா ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தற்போது அந்தக் கடிதத் தகவல் வெளியாகி காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அந்த கடிதத்தில், ‘எனக்கு மன அழுத்தம், பணிச்சுமை, குடும்பச் சூழ்நிலை இவற்றை தாங்க முடியவில்லை. இதில் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனம் பேதலித்து உள்ளது. தயவுசெய்து எனது உயிரை காப்பாற்றுங்கள். பணி சுமை குறைந்த இடத்தில் என்னை பணியிடமாற்றம் செய்யுங்கள்’ என டி.எஸ்.பி சந்தியா குறிப்பிட்டுள்ளார். 


இந்த கடிதம் காவல்துறையினர் வட்டாரத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற கடிதத்தைப் பலமுறை டி.எஸ்.பி சந்தியா, உயரதிகாரிகளுக்கு எழுதியதாகவும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இவருக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இவரது கணவரும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வருவதால் பணிச்சுமை, குடும்பச்சுமை,  இவைகள் எல்லாம் சேர்ந்து காவல்துறை அதிகாரி சந்தியாவிற்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.