Skip to main content

அதிமுக மகளிர் அணி செயலாளர் மீது புகார் அளித்த பெண்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Woman complains about AIADMK women's team secretary

 

தென்காசி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளராக உள்ளவர் சொர்ணா. இவர் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் உள்ள மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவரது மனைவி மலர்மகள், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எஸ்பி அலுவலகத்திற்குச் சென்று ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில், அவரது கணவர் செந்தமிழ்ச்செல்வன் ஆசிரியராகப் பணிபுரிந்துவருவதாகவும் இவர்களது மகன் பொறியியல் பட்டம் படித்துள்ளார்.

 

அவருக்கு நெய்வேலி என்.எல்.சி தலைமை நிறுவனத்தில் பொறியாளராக வேலை வாங்கித் தருவதாக தென்காசி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளர் சொர்ணா கூறியுள்ளார். அதை நம்பி திண்டிவனம் அதிமுக பிரமுகர் ஐயப்பன் என்பவரை அழைத்துச் சென்ற மலர்மகள், அவரது கணவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் 2019 அக்டோபர் 10ஆம் தேதி 11 லட்ச ரூபாயை சொர்ணாவிடம் நேரடியாக கொடுத்தோம். இதேபோன்று தங்களது உறவினரின் மகனுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறியதையடுத்து அதற்காக தனியாக ஒன்பது லட்ச ரூபாய் பணத்தை சொர்ணாவினுடைய கணவர் ஜெயப்பிரகாஷிடம் கொடுத்ததாகவும், இருவருக்கும் இரண்டு மாதங்களில் மேற்படி வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தவர்கள் அதன்பிறகு வேலை வாங்கித் தரவில்லை.

 

பணத்தையும் திருப்பித் தரவில்லை. காலம் கடந்ததால் அவ்வப்போது சென்று நாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுவந்தோம். அதன் பிறகு கடந்த 2020 ஆகஸ்ட் 16ஆம் தேதி 3 லட்சமும் 17ஆம் தேதி 5 லட்சமும் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார்கள். இன்னும் மீதி தர வேண்டிய தொகை 12 லட்ச ரூபாயைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார். மலர்மகள் தென்காசி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளது குறித்து விழுப்புரம் காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது. அதிமுக மாவட்ட மகளிரணிச் செயலாளர் மீது அளிக்கப்பட்ட பண மோசடி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.