Skip to main content

'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்! மரண வாக்குமூலத்தால் திருப்பம்!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

ஆத்தூரில், பாலியல் உறவுக்கு அழைத்தும் மனைவி வர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவி, குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி கணவனே எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (31). ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மனைவி பூமதி (26). இவர்களுக்கு பூவரசன் (4) என்ற ஆண் கு-ழந்தை உள்ளது. நிலாஸ்ரீ (3) என்ற பெண் குழந்தையும் இருந்தாள்.

 

murder


கார்த்தி, ரிக் வண்டி தொழிலாளி என்பதால் அடிக்கடி வடமாநிலங்களுக்கு ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக சென்று விடுவார். மாதத்திற்கு சில நாள்கள் மட்டுமே குடும்பத்துடன் தங்கி இருப்பார். கார்த்திக்கு மது போதை பழக்கம் இருந்து வருவதால், அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் கார்த்தி வீட்டுக்கு வந்திருந்தபோதும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 18ம் தேதி இரவு கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு வெடிக்க, இருவரும் தனித்தனி அறையில் படுத்துத் தூங்கியுள்ளனர்.

 


நள்ளிரவில் பூமதி மற்றும் இரு குழந்தைகளும் தீயில் கருகிக் கிடந்தனர். கார்த்தி கத்தி கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தன் மீதான கோபத்தில் மனைவி குழந்தைகளை எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கார்த்தி அப்போது சொன்னார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

murder

 

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த பூமதி, தன் மீதும் குழந்தைகள் மீதும் கணவனே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றதாக தன் சகோதரரிடம் கூறியுள்ளார். அவருடைய மரண வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்த அவர், இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசாரிடம் தகவல் அளித்தார். 

 


அந்த வீடியோவில், ''முதல்நாள் மது போதையில் வந்த கார்த்தி, என்னிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். அதற்கு அடுத்த நாளும் போதையில் இருந்த கார்த்தி, என்னை அடித்து துன்புறுத்தினார். கொஞ்சம் போதை தெளிந்த உடன், அவர் சாப்பாட்டை ஊட்டிவிடுமாறு கூறினார். இருவரும் 'ஜாலியாக' இருக்கலாம் வா என்று அழைத்தார். 

 

murder

 

ஆனால் இரு நாள்களாக அடித்து துன்புறுத்தியதில் எனக்கு உடல் வலி இருக்கிறது. இப்போது ஜாலியாக இருக்கலாம் என்றால் எப்படி நான் வர முடியும் என்று கூறி நான் அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டேன். இதனால் அப்போதும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் எனக்கு இல்லாதவள், இந்த உலகத்தில் உயிருடன் இருக்கக் கூடாது என்று கூறி, என் மீதும், குழந்தைகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்,'' என்று கூறியிருந்தார்.

 


போலீசாரிடமும் இதையே மரண வாக்குமூலமாக பூமதி தெரிவித்துள்ளார். இதையடுத்து கொலை முயற்சி வழக்காக போலீசார் பதிவு செய்தனர். கார்த்தியை அழைத்து விசாரணை நடத்தியதில், அவரே கொலை செய்ய முயற்சித்துவிட்டு, மனைவி மீது பழி போட்டு தப்பிக்க நினைத்திருப்பது அம்பலமானது.

 


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பூமதி இன்று (செப். 22, 2018) அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில், பெண் குழந்தை நிலாஸ்ரீயும் இறந்தாள். சிறுவன் பூவரசனுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

தாயும், குழந்தையும் இறந்ததை அடுத்து இதனை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். கார்த்தியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

94,737 மது பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
94,737 bottles of liquor destroyed by road roller

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் ஒன்றாக சேர்த்து கிடங்கில் வைத்திருந்தனர்.

அந்தப் பாட்டில்கள் ரோடு ரோலர் வாகனம் கொண்டு உடைத்து அழிக்கப்பட்டது. சுமார் 94,737 மது பாட்டில்கள் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். மது பாட்டில்கள் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு ரோடு ரோலர் வைத்து நொறுக்கப்பட்டு அழிக்கப்படும் அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காரில் வைத்து மது விற்பனை; சென்னையில் பகீர்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Sale of liquor from the car; Bagheer in Chennai

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் திருமண மண்டபம் ஒன்றின் அருகே பட்டப்பகலில் காரில் வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதும் அதைப் பொது இடத்தில் வாங்கி சிலர் அருந்துவது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.