‘உண்மையான உழைப்பெல்லாம் தனக்குச் சரிவராது’ என்பதில் தீர்மானமாக இருப்பவன் நிக்கோலஸ். அதற்காகவே, அன்னை தெரசா பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தினான். இத்தனைக்கும் இவன் மனைவி ஆசிரியையாக இருக்கிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு அருகிலேயே வீடு இருப்பது இவனுக்கு வசதி யாகிப்போனது.
![l](http://image.nakkheeran.in/cdn/farfuture/zCVI4Tb4Akclx9_flN_GsUgHLmMJ-vRWvkOtzkWok3I/1566992139/sites/default/files/inline-images/lady3.jpg)
‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்துவிடும்’ என்ற பழமொழி நிக்கோலஸ் விஷயத்திலும் பொருந்திப் போகிறது.
![l](http://image.nakkheeran.in/cdn/farfuture/_R7oVBkTan7f3ZXKob4Bovp2CzN29fFRzIgDlpw3FD4/1566992159/sites/default/files/inline-images/lady4.jpg)
சிவகாசியை அடுத்துள்ள நாரணாபுரம் என்ற கிராமத்தில் உள்ள பெண்களிடமும் இவன் வாலாட்ட, ஒரு பெண் இவனைப் பின்னி எடுத்துவிட்டார். சட்டையைப் பிடித்து திட்டித் தீர்த்தார். வீதிகளிலும் ஓடஓட விரட்டுகிறார். பொதுஇடத்தில் இவன் அசிங்கப்பட்ட அந்த மொமொன்ட்டை செல்போனில் வீடியோவாக எடுத்த சிலர், வலைத்தளங்களில் பரப்பிவிட்டனர்.
![l](http://image.nakkheeran.in/cdn/farfuture/8Dvd0V42YKZ02kHt8HxXa40s-p3U0zTFGmtt-JJWkgo/1566992182/sites/default/files/inline-images/lady1_0.jpg)
நிக்கோலஸ் மீது விருதுநகர் மாவட்ட காவல் நிலையங்களில் பெண்களில் சிலர் புகார் அளித்தும் பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று புலம்புகிறார்கள், நாரணாபுரம் மகளிர் குழுவினர்.
![l](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y2QksTjH86i6YgBGstVYNe_RZ2XmhhmaYnuXXf8OLnw/1566992501/sites/default/files/inline-images/lady2_0.jpg)