Skip to main content

உலக சாதனையும்; உள்ளுக்குள் வேதனையும்... நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்!  

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

கண்களைக் கட்டிக்கொண்டே 25 விதமான செயல்களைச் செய்து சாதனை படைத்திருக்கிறார் ஹர்ஷ நிவேதா. விருதுநகரைச் சேர்ந்த இவர்,  அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். 12 வயதே ஆன இவர், தன்னுடைய இரு கண்களையும் கருப்புத் துணியால் கட்டியடி புத்தகம் வாசித்தார்; அப்துல் கலாம் படம் வரைந்தார்; க்யூப் சரிசெய்தார்; சைக்கிள் ஓட்டினார். இதுபோன்ற 25 வகையான செயல்களை 45 நிமிடங்களில் செய்துமுடித்து, Universal achievers book of records மற்றும் Future Kalam Book of Records ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார். இது உலக சாதனை மட்டுமல்ல; உலகிலேயே முதன் முறையாக நடத்தியிருக்கும் சாதனை ஆகும். இவர், 2018-ல் உத்தித பத்மாசனத்தை 174 வினாடிகள் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர். 


இதே விருதுநகரில், இரட்டையர்களான விஷாலினியும் அஸ்வினும் நீண்ட நேரம் (1 மணி 12 நிமிடங்கள் 23 விநாடிகள்) நீரில் மிதந்தபடி யோகா செய்தும், முட்டையை தங்களின் மணிக்கட்டால் உடைத்தும் சாதனை படைத்துள்ளனர். மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சித்தார்த்தன். இவர், ஆஸ்திரேலியா சென்று  மாற்று திறனாளிகளில் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கான சர்வதேச பாரா ஒலிம்பிக்கில், சைக்ளிங் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்று, 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 20 கி.மீ. சைக்ளிங் பிரிவில் பாரா ஒலிம்பிக்கில் இந்திய அளவில், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்தவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 

 

மதுரை, சிக்கந்தர் சாவடி பெத்சால் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படித்துவரும் சித்தார்த்தன், முறையான பயிற்சி பெறாமலே பதக்கம் வென்றிருக்கிறார். தமிழகத்திலிருந்து மொத்தம் 6 பேர் தேர்வானார்கள். நிதிவசதி இல்லாததால்,  அவர்களில் 5 பேர் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் திருமாறன்,  ரூ.4 லட்சம் கடன் வாங்கி செலவு செய்து, தன் மகன் சித்தார்த்தனை பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வைத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் உள்ளுக்குள் வேதனையுடன் தவிக்கும் அவர்,    “தமிழக அரசு நிதி உதவியும் முறையான பயிற்சியும் வழங்கினால் இனிவரும் போட்டிகளில் சித்தார்த் தங்கப்பதக்கமே வெல்வான்.” என்று உறுதிபடச் சொல்கிறார். சாதனை மாணவர்களை வாழ்த்துவோம்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.