Skip to main content

லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி கைது...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Villupuram municipal officer arrested for taking bribe ...

 

 

விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் விழுப்புரம் நகர பகுதியைச் சேர்ந்த சாலாமேடு பகுதியில் புதிதாக ஒரு வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த மனையில் வீடு கட்டுவதற்காக கட்டிட வரைபட நகல் அனுமதி கேட்டு விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து காத்திருந்தார். 

 

அவருக்கு உடனடியாக அனுமதி கொடுக்காமல் நகராட்சி அலுவலகத்தில் அலைக்கழித்து வந்துள்ளனர். இதனையடுத்து வழக்கறிஞர் ராஜசேகர் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராக வேலையில் இருக்கும் ஜெயவேல் என்பவரை சந்தித்து, “தனக்கு கட்டிட வரைபட அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது அது உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று கேட்டுள்ளார். 

 

அப்போது ஜெயவேல் ரூ.8,000 லஞ்சமாக பணம் கொடுத்தால் கட்டிட வரைபட நகல் விரைவில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதற்காக தனியார் கட்டுமான பொறியாளர் மோகன கிருஷ்ணன் என்பவர் இருவருக்குமிடையே  இடைத்தரகராக இருந்து செயல்பட்டுள்ளார். 

 

இதையெல்லாம் கேட்டு மனம் நொந்துபோன வழக்கறிஞர் ராஜசேகர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை மேலும் நாம் முறையாக இடம் வாங்கி அதில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்கும்போது அநியாயமாக லஞ்சம் கேட்கிறார்களே என்று மனவேதனை அடைந்துள்ளார். இதனால் ராஜசேகர், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார். 

 

லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரடண்டு யுவராஜ், இவரது புகாரை ஏற்று கொண்டதோடு அவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தலைமைக் காவலர்கள் விஜய், தாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் சகிதமாக நேற்று காலை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்குவந்து மறைந்து காத்திருந்தனர். அதற்கு முன்பாக வழக்கறிஞர் ராஜசேகரிடம் ரசாயனம் பூசப்பட்ட 8,000 ரூபாய் பண நோட்டுகளை கொடுத்து அனுப்பி இருந்தனர். அந்தப் பணத்தை ராஜசேகர் ஜெயவேலிடம் நேரில் வழங்கினார். அவர் பணத்தை பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். 

 

இதில் இடைத்தரகராக செயல்பட்ட பொறியாளர் மோகனகிருஷ்ணனனும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். நகரமைப்பு அலுவலர் ஜெயவேலின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. இவர் 14 ஆண்டுகளாக விழுப்புரத்தில் பணியாற்றி வருவதாகவும் தற்போதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கில் சிக்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர். விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதனால் நகராட்சி அலுவலகம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக கிடந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.