Skip to main content

’நாரதர் கலகம் நல்லதில் முடிந்தது!’ -பிரேமலதாவிஜயகாந்த்

Published on 10/03/2019 | Edited on 11/03/2019

 

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதை ஓபிஎஸ், இபிஎஸ், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தனர்.

 

a

 

அப்போது பேசிய ஓபிஎஸ், ’’அதிமுக - தேமுதிக கூட்டணி என்பது உணர்வுப்பூர்வமானது.    இந்த கூட்டணி கெட்டியான கூட்டணி.  வேட்புமனு தாக்கலுக்கு முன் தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவு செய்யப்படும்’’என்று கூறினார்.

 

ad


அதன்பின்னர் பேசிய பிரேமலதா,   ’’அதிமுக - தேமுதிக கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணி. சட்டப்பேரவை இடைத்தேர்தல்,  உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.   அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.   அதற்கு நான் விளக்கம் கொடுத்துவிட்டேன்.   

 

a

 

தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.   எண்களில் ஒன்றும் கிடையாது.  எண்ணங்களில்தான் எல்லாம் இருக்கிறது.  இந்த கூட்டணி அமையாமல் இருக்க சிலர் சதி வேலைகளில் ஈடுபட்டனர்.  பரவாயில்லை,   நாரதர் கலகம் நல்லதில் முடிந்தது.  கெடுவார்கள்தான் கேடு நினைப்பார்கள்.  

 

சார்ந்த செய்திகள்