Skip to main content

பள்ளி விடுமுறை; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

two school student passed away dindigul

 

திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை சேர்ந்தவர் கதிரேசன். இவர் தனது குடும்பத்துடன் தாடிக்கொம்புவில் வசித்துக் கொண்டு  டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மனோஜ் (14) அங்குள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கதிரேசனின் உறவினர் சுப்பிரமணி. இவர் தாடிக்கொம்பு அருகே உள்ள கருங்கல் பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமுருகன் (14) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். 

 

குடியரசு தின மற்றும் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என தொடர்ந்து இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் கதிரேசன் தனது மகன் மனோஜ் குமாரை உறவினரான சுப்பிரமணி வீட்டில் விட்டுள்ளார். இதனிடையே மாணவர்கள் இரண்டு பேரும் இன்று விளையாடு சென்றுள்ளனர். அப்பொழுது ஊரின் அருகே உள்ள குடகனாற்றில் மாணவர்கள் இரண்டு பேரும் ஆற்றில் இறங்கி குளிப்பதை அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்த்துள்ளார் பின்னர் அவர்கள் நீச்சல் தெரியாமல் தத்தளித்து மூழ்கிக்  கொண்டிருந்ததை பார்த்து கூச்சல் போட்டுள்ளார். 

 

இதனையடுத்து அங்கு வந்த பொது மக்கள் ஆற்றில் இறங்கி நீச்சல் தெரியாமல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை கைப்பற்றினார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் மாணவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.