Skip to main content

ஆள் இல்லாத காட்டில் சடலத்தைத் தூக்கி வீசிச் சென்ற நபர்கள்!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

trichy

 

திருச்சி மாவட்டம், இருங்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று ஆள் நடமாட்டம் இல்லாத கிராமப் பகுதியில் வந்து நின்றது.

 

ஆம்புலன்ஸ் நிற்கக்கூடிய பகுதியானது மண் சாலை உள்ள பகுதியாக உள்ளது. அப்பகுதிச் சுற்றிலும் கருவேல மரங்கள் உள்ளன. பாதுகாப்புக் கவச உடையுடன் ஒருவர் கீழிறங்கி ஆம்புலன்ஸ் பின்பக்கக் கதவைத் திறந்து. சீக்கிரம் எடு எனக் கூறிக்கொண்டே அண்ணே இரக்கலாமா எனக்கேட்க மற்றவர் இரக்க வேண்டியதுதான் என்கிறார்.

 

உடனே அவருடன் முகக்கவசம், கையுறை அணிந்து கைலியுடன் இரண்டு நபர்கள் ஒரு மனித சடலத்தை இறக்குகிறார்கள். கைலி அணிந்தவர்கள் சடலத்தின் இரண்டு கைகளையும் பிடிக்க பாதுகாப்புக் கவசம் அணிந்தவர் கால்களைப் பிடித்துக்கொண்டு செல்கிறார். இதுக்கு மேல இறங்க முடியாது எனப் பேசும்பொழுது தள்ளி விட்டுப் போங்க என ஆண் குரல் கட்டளையிட சடலத்தைப் பொது இடத்தில் தூக்கிப் போடுகின்றனர்.

 

அந்த இடத்தில் ஒரு சிறிய குன்றுப்பாறை உள்ளது. அதன் பின்பு குழி போல இருக்கின்றது. அப்பகுதி பின்பு பனைமரம் உள்ளது. சடலத்தை தள்ளிவிட்ட உடன் வெள்ளை பவுடர் பறப்பது பதிவாகியிருக்கின்றது. இத்துடன் வீடியோ பதிவு நிறைவடைகின்றது. 

 

இந்த வீடியோ சமூக ஆர்வலரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலம் இறக்கப்பட்ட இடமானது சமயபுரம் கோட்டமேடு பகுதி எனச் சொல்லப்படுகிறது. காவல்துறையினர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை நிகழ்வுகளை ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.