Skip to main content

நூறு நாள் வேலையில் கிடைத்த புதையல்...வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

The treasure found in a hundred days' work ... handed over to the Governor!

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு நூறு நாள் வேலை நடந்து கொண்டிருந்த போது, ஒரு பெண் மண் வெட்டிய இடத்திலிருந்து தாலிக் கயிற்றில் அணியும் மணிகள் மற்றும் காசுகள் கொத்தாகக் கிடைத்துள்ளது.

 

கண்டெடுக்கப்பட்ட மணி, காசுகளை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் கண்டெடுத்த பெண்கள். அந்த காசுகளில் 22 கேரட் கோல்டு 1996 என்று அச்சிடப்பட்டுள்ளது.

The treasure found in a hundred days' work ... handed over to the Governor!

இந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்களை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகியிடம் ஒப்படைத்தனர். மொத்த ஆபரணங்களின் எடை 80 கிராம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தங்க நகைகளா அல்லது தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்களா என்றும் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை கண்டறியவும், புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியரிடம் அனுப்பி வைக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

ஆலங்குடி பகுதியில் தாலியுடன், இது போல நிறைய மணிகள், காசுகளையும் சேர்த்து அணியும் கலாச்சாரம் இருப்பதால் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு யாரோ அணிந்திருந்த இந்த ஆபரணம் காணாமல் போய் இருக்கலாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பெரிய கோயில் குடமுழுக்கு; யாகபூசையில் கலந்து கொண்ட அமைச்சர்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
minister who participated in Yagapoosai at Temple Kudamuzhukku event

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் ஆசியாவிலேயே உயரமான 33 அடி உயரம் கொண்ட பழமையான குதிரை சிலையுடன் அமைந்துள்ள தானவநாட்டு பெரிய கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படும் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில். திருப்பணிக் குழு, கிராம மக்கள், கொடையாளர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் முடிந்து கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எதிர்வரும் ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்க உள்ளது.

குடமுழுக்கில் அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, மெய்யநாதன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாஞ்சாலி செல்வகுமார், சரண்யா ரஞ்சித்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். குடமுழுக்கை முன்னிட்டு கீரமங்கலம் சிவாச்சாரியார் ரவிசங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜையுடன் யாக பூஜைகளைத் தொடங்கி செய்து வருகின்றனர். நேற்று 3 வது நாள் யாகசாலை பூஜை நடந்தது. இதில் அமைச்சர் மெய்யநாதன் உட்பட விழாக்குழுவினர், கிராமத்தினர் யாகசாலை பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுகளை ஊர்வலமாக தூக்கி வந்து யாக பூஜையில் பங்கேற்றனர். முன்னேற்பாடுகள் பணிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

minister who participated in Yagapoosai at Temple Kudamuzhukku event

மேலும், கோயில் வளாகம் மற்றும் பனங்குளம் பாலம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளையும் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் குளமங்கலம் வடக்கு பாஞ்சாலி செல்வகுமார், குளமங்கலம் தெற்கு சரண்யா ரஞ்சித்குமார், பனங்குளம் தங்கராசு, ஒன்றியக் கவுன்சிலர் ரவி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story

204 நீர்நிலைகளைத் தூர்வாரிய பொக்லைனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
 youth celebrated birthday by cutting a cake for pokilin who diverted 25 water bodies!

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் புரட்டிப் போட்ட போது மீட்புப் பணிக்காக இளைஞர்களால் கைகோர்த்து தொடங்கிய கைஃபா என்ற அமைப்பு புயலால் சேதமடைந்த மரங்களை அகற்றி சீரமைத்த பிறகு டெல்டா மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களை சீரமைத்து நீர்நிலைகளை உயர்த்தவும் நிலத்தடி நீரை சேமிக்கவுமாக விரிவுபடுத்தப்பட்டது

பேராவூரணியில் தொடங்கி கல்லணை கடைமடை பாசனப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்திலும் பணி செய்ய பின்னர் தமிழ்நாடு முழுவதும் பணியை விரிவாக்கிக் கொண்டது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டை, கால்வாய்களை சீரமைத்து தண்ணீரையும் சேமித்து காட்டியுள்ளனர். இளைஞர்களின் சொந்த செலவிலும் தன்னார்வலர்களின் பங்களிப்பிலும் நீர்நிலை மராமத்துப் பணிகளை செய்து வரும் கைஃபா வின் செயல்பாடுகளைப் பார்த்து மில்க் மிஸ்ட் நிறுவனம் பொக்கலின் இயந்திரங்களை சொந்தமாகவே வாங்கிக் கொடுத்துவிட்டது. 

அப்படி  2019 ஆம் ஆண்டு மில்க் மிஸ்ட் நிறுவனம் வாங்கிக் கொடுத்த புதிய பொக்கலைன் இயந்திரம் முதன் முதலில் கீரமங்கலம் வண்ணான்குளத்தைச் சீரமைத்து முதல் பணியை தொடங்கி தற்போது 204 வது குளமாக பேராவூரணி ஆண்டிகாடு - பள்ளத்தூர் பெரியகுளம் ஏரியை தூர்வாரிக் கொண்டிருக்கிறது. மில்க் மிஸ்ட் நிறுவனம் கைஃபா வுக்கு இந்த வாகனத்தை வாங்கிக் கொடுத்த நாளை பிறந்த நாளாக கருதும் கைஃபா அமைப்பினர் அந்த நாளில் பொக்கலைன் எந்திரத்தின் பிறந்த நாளாக கருதி கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து கைஃபா அமைப்பினர் கூறும் போது, “இளைஞர்களின் கையில் இருந்த சிறு தொகையுடன் சின்னச் சின்ன பணிகளைத் தொடங்கி நீர்நிலைகளை சீரமைப்பதைப் பார்த்து ஏராளமான தன்னார்வலர்கள் தானாக முன்வந்து செலவில் பங்கெடுத்துக் கொண்டனர். பல ஆண்டுகளாக மராமத்து இல்லாமல் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த நீர்நிலைகளில் கைஃபாக தூர் வாரிய ஏரி, குளங்களில் தண்ணீர் நிரைந்திருப்பதைப் பார்த்ததுடன் அப்பகுதியில் நிலத்தடி நீரும் உயர்வதை மக்கள் கண்கூடாக கண்டனர். இதனைப் பார்த்த மில்க்மிஸ்ட் நிறுவனம் ஒரு பொக்கலைன் இயந்திரத்தை புதிதாக வாங்கி கைஃபாவிடம் ஒப்படைத்தனர். அந்தப் பொக்லைன் மூலம் இதுவரை 204 ஏரி, குளங்களை சீரமைத்து தண்ணீர் நிரப்பி சுற்றுச்சூழலை பாதுக்க ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடவும் உதவிய பொக்கிலின் கைஃபா வுக்கு வந்து 5 வருசமாச்சு. அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுகிறோம்” என்றனர்.

நீர்நிலை உயர உதவிய பொக்லைனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.