Skip to main content

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... நிலையூரில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

நான்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு  அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

 

thiruparangkuntram by election....stalin election campaign at nilaiyur

 

இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து திண்ணாப்பிரச்சார தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது நெசவாளர்கள் வாழும் பகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் நெசவு தறியை இயக்கி  நெசவு பணியில் ஈடுபட்டார்.

 

அதனையடுத்து திண்ணை பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் கூடியிருந்த மக்களிடையே சவுராஷ்டிரா மொழியில் பேசினார்.

 

thiruparangkuntram by election....stalin election campaign at nilaiyur

 

thiruparangkuntram by election....stalin election campaign at nilaiyur

மேலும்  பேசுகையில்,  

 

பெருவாரியான ஊராட்சிகளுக்கு சென்ற ஒரே அரசியல் கட்சி தலைவர் தான் தான். மற்ற கட்சிகளை போல வந்தார்கள் வாக்கு கேட்டார்கள் போனார்கள் என்றில்லாமல் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருக்கும் என தெரிவித்தார்.

 

இந்த பிரச்சார கூட்டத்தில் ஐ.பெரியசாமி உட்பட பல திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்