Skip to main content

'இந்தியாவில் அதிபர் ஆட்சி கொண்டுவர திட்டமா?'-எம்.பி ராசா பரபரப்பு பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'Is there a plan to bring President's rule in India?'-MP Rasa sensational speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில்திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி  திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி அனைவரையும் வரவேற்றார். சட்டமன்ற தொகுதி எம்எல்ஏக்கள் (குளித்தலை) மாணிக்கம், (லால்குடி) சௌந்தரபாண்டியன், (மண்ணச்சநல்லூர்) கதிரவன், (துறையூர்) ஸ்டாலின் குமார், (பெரம்பலூர்) பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், தர்மன் ராஜேந்திரன் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா பேசுகையில், ''வர இருக்கின்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காக்க கூடிய தேர்தல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஒரு மொழியை சிதைத்தால் ஒரு சமூகத்தை ஒரு மாநிலத்தை சிதைக்க முடியும். அந்த வகையில் இந்தி எனும் மொழியை இந்தியாவின் ஒட்டுமொத்த மொழியாக மாற்ற பாரதிய ஜனதா கட்சி துடிக்கிறது. எனவே இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.

'Is there a plan to bring President's rule in India?'-MP Rasa sensational speech

எம்பி ராசா பேசுகையில், 'பாரதிய ஜனதா கட்சி அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கான திட்டத்தை வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் எனக்குள் ஏற்படுகிறது. கேள்வி நேரத்தின்போது பாரத பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வருவதில்லை அவ்வாறு வந்தால் தான் நாட்டில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை அவர் அறிந்து கொள்ள முடியும். நாட்டில் உள்ள பிரச்சனைகள் எதையும் அறியாமல் அவர் ஊர் சுற்றும் ஒரு பிரதமராக உள்ளார். நாட்டு மக்களை அடிமையாக்க துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்க வேண்டும். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் இந்தியா கூட்டணி வெற்றி வாய்ப்பை உறுதி படுத்த வேண்டும்'' என்றார்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், 'தமிழக முதல்வர் கட்டமைத்துள்ள இந்தியா கூட்டணி மிகப்பெரிய மகத்தான வெற்றியை சந்திக்க இருக்கிறது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண் நேரு மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு, ''பெரம்பலூர்  நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு ஆகும். அரசியல் பணிகளை அருகில்நின்று பார்த்து உள்ளேன். ஆனால் தற்போது அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்கள் பணியாற்ற உள்ளேன். எனவே வரும் தேர்தலில் இந்தியா  கூட்டணி தலைமையிலான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும்'' என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ''பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெறுவதற்கு நீங்கள் முழுமையாக பாடுபட வேண்டும்.செயல் வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த  அனைவருக்கும் நன்றி. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற  நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்'' என்றார்.

இந்நிகழ்வில் கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.