Skip to main content

9 டன் எடை கொண்ட செல்போன் டவர்; சல்லி சல்லியாகப் பிரித்துக் கடத்திய கும்பல் கைது

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

The theft of a 9-ton cell phone tower; 3 people arrested!

 

சேலம் அருகே, 9 டன் எடையுள்ள செல்போன் டவரையே சல்லி சல்லியாக பிரித்து கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த டவரை பாதுகாக்க, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், காவலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

 

கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து, பாதுகாவலரிடம் சில ஆவணங்களைக் காண்பித்து, இந்த செல்போன் டவர் பழுதடைந்துள்ளது. அதை பழுதுநீக்கம் செய்ய வசதியாக டவரை கழற்றி வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு மர்ம நபர்கள், அந்த செல்போன் டவரை ராட்சத கிரேன் மூலம் சல்லி சல்லியாக கழற்றி, கடத்திச் சென்று விட்டனர். 

 

The theft of a 9-ton cell phone tower; 3 people arrested!

 

இந்த நிலையில், செல்போன் டவர் நிறுவிய உண்மையான நிறுவனத்தின் ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிக்கு வந்துள்ளனர். அங்கு செல்போன் டவர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது, மர்ம நபர்கள் ஒரு டவரையே கழற்றி கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. 

 

இதையடுத்து சேலத்தில் பணியாற்றி வரும் செல்போன் நிறுவன மேலாளர் தமிழரசன், வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தன்று செல்போன் டவர் அமைந்திருந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

 

கடத்திச் செல்லப்பட்ட செல்போன் டவரும், தற்போது பயன்பாடற்று இருப்பது தெரிய வந்துள்ளது. சேலத்தில் கைவரிசை காட்டிய கும்பல், தமிழகத்தில் வேறு சில மாவட்டங்களிலும் இதேபோல் செல்போன் டவர்களை குறிவைத்து திருடிச் சென்றுள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த நாகமுத்து (35), தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சண்முகம் (33), வாழப்பாடியை காமராஜர் நகரைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா (38), ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். 

 

அவர்களிடம் இருந்து 6.46 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 டன் எடையுள்ள செல்போன் டவரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட இரும்பு பட்டைகள், இரும்பு உருளைகள், ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஹத்ராஸில் நடந்தது விபத்து அல்ல; கொலை” - வெளியான பரபரப்பு தகவல் 

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Boleh Bala lawyer said that the masked gang was involved in Hathras incident

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றிய பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  

இதனிடையே வீடியோ வாயிலாக பேசிய சாமியார் போலே பாலா, “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், கமிட்டியின் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

இது குறித்து பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது விபத்தோ, சதி திட்டமோ எதுவாக இருந்தாலும் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டு இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சாமியார் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங், “சாமியார் போலே பாலாவின் பேச்சைக் கேட்க நிறைய பேர் வந்திருந்தனர். அதில் முகங்களை மறைத்தப்படி முகமூடி அணிந்தப்படி கூட்டத்திற்குள் 15 முதல் 16 நபர்கள் வந்திருந்தாக, நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள். முகமூடி அணிந்த நபர்கள் கூட்டத்திற்கு வரும் போது கையில் விஷக்கேனை கொண்டு வந்து, பின்பு அதனைக் கூட்டத்தில் வைத்து திடீரென திறந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை பார்த்தேன். அவர்கள் யாரும் காயப்பட்டு உயிரிழக்கவில்லை; மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். அவர்களின் பணியை செய்துவிட்டு தப்பித்து செல்ல வசதியாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனையும் சமர்ப்பிப்போம். இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்க வேண்டும். இது விபத்து அல்ல; கொலை” என்று தெரிவித்துள்ளார்.  

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.