Skip to main content

இல்லம் தேடி வரும் கோயில் பிரசாதம்; தமிழ்நாடு அரசு புதிய முன்னெடுப்பு

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Temple offerings seeking a home; Tamilnadu government new initiative

 

தமிழகத்தில் கோயில் பிரசாதங்களை தபால் துறை மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்படும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. கோயில்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையானது தபால் துறையுடன் இணைந்து, கோயில்களின் பிரசாதங்களை பக்தர்களுக்கு அனுப்பும் திட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 48 முதல்நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்படும் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் கோயில்கள் குறித்த தகவல்களை பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்திற்கு திருக்கோயில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகத்தில் துவங்கி வைத்தார்.

 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் போன்ற 48 கோயில்கள் இத்திட்டத்தில் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் விருப்பப்படி அர்ச்சனை செய்து பிரசாதங்களை அவரவர் இல்லங்களுக்கே அனுப்பி வைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை தபால் துறையுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நபர்களுக்கும் பிரசாதங்களை அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாவது திட்டமாக திருக்கோயில்கள் எனும் செயலி அறிமுகத் திட்டம். இத்திட்டத்தின் கோயில்களின் வரலாறு, தகவல்கள், கோயில்களில் இருக்கும் வசதிகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த செயலியில் கோயிலில் செய்யப்படும் பூஜைகள், நடை திறந்து இருக்கும் நேரம், கட்டண விவரங்கள், முக்கிய விவரங்கள், மெய் நிகர் காணொளி, கோவில்களைச் சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி போன்ற வசதிகள் அனைத்தும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் கோயில் பணிகளுக்கான நன்கொடைகள், அன்னதானம் போன்றவற்றிற்கான நன்கொடைகள் வழங்கும் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.