Skip to main content

நவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி... துணைமுதல்வர் ஒ.பி.எஸ் துவக்கி வைத்தார்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

The task of removing the sky lotuses with a modern machine ... Deputy Chief OBS launched!

 

தேனி அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணியினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  துவக்கி வைத்தார்.

 

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 80 ஏக்கர் பரப்பளவில் மந்தையம்மன் குளம் உள்ளது. இக்குளம் முழுவதும் ஆகாயத் தாமரைகள் நிறைந்து தண்ணீர் மாசடைந்த நிலையில், இக்குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வார அப்பகுதி விவசாயிகள், குடியிருப்போர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்த்திடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, துணை முதல்வரின் உத்தரவின்பேரில் ஆகாயத் தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தனது சொந்த செலவில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிகளைத் துவக்கினார்.

 

ஆகாயத் தாமரைகள் அதிகளவில் பரவி இருப்பதால் விரைந்து அகற்றுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், ஆகாயத் தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் ஏற்பாட்டில் அதிநவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியினை நேற்று (18.02.2021) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சித்தலைவர் மரியம் பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 10 நாட்களுக்குள் ஆகாய தாமரைகள் முழுமையாக அகற்றப்படும் எனத் தெரிகிறது.

 

The task of removing the sky lotuses with a modern machine ... Deputy Chief OBS launched!

.

இப்பணிகள் குறித்து அப்பகுதி விவசாய சங்கத்தினர் கூறும்போது, 'ஆகாயத் தாமரைகளை அகற்றுவதன் மூலம் தண்ணீர் மாசுபடாமல் பாதுகாக்கப்படும். சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் உயரும். மேலும் இக்குளத்திலிருந்து நீர் மாறுகால் பாய்ந்து மீறுசமுத்திரம் கண்மாயை அடைகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிநவீன இயந்திரத்தை வரவழைத்து, பணிகளைத் துவக்கி வைத்த தமிழக துணை முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கும் விவசாயிகள் மற்றும் இப்பகுதியில் குடியிருப்போர் சார்பில்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளாமுருகன், தேனி நகரச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், நகர அவைத்தலைவர் முருகேசன், சார்பு அணி செயலாளர்கள், இலக்கிய அணி முருகேசன், சிறுபான்மை பிரிவு அபுதாஹீர், வர்த்தக அணி கே.எஸ்.கே.நடேசன், மாணவரணி பாலமணிமார்பன், மீனவரணி வைகை கருப்புஜி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாலசந்தர், நகர துணைச் செயலாளர் ரெங்கநாதன், நகரப் பொருளாளர் வீரமணி, நகர அம்மா பேரவைச் செயலாளர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுரேஷ், கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராஜகுரு, செல்வராஜ், அசோக் மற்றும் மயில்வேல், ஆப்பிள் முருகன், ஜெயப்பிரகாஷ், நாகராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.