Skip to main content

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

tamilnadu cm palanisamy discussion with doctors team for tomorrow


இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 


இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை (26/05/2020) ஆலோசனை நடத்துகிறார். மே 31- ஆம் தேதியுடன் முடியும் பொதுமுடக்கத்தை ஐந்தாவது முறையாக நீட்டிக்கலாமா? வேண்டாமா? என முதல்வர் கேட்டறிகிறார். மேலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார். இதுவரை மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படியே தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்