Published on 26/02/2019 | Edited on 26/02/2019
இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தரமான சம்பவம் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
![TAMILISAI TWIT](http://image.nakkheeran.in/cdn/farfuture/MGFucHW0LjBr0j8JFiJOPk7CC-yjs4LE-jtf6YzsK80/1551177026/sites/default/files/inline-images/xEBSPiwc_400x400%20%281%29.jpg)
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் ஆயிரம் கிலோ குண்டு வீசி தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில்,
![TWIT](http://image.nakkheeran.in/cdn/farfuture/3s-d8nggDuemJ2U4hHRlLvnBElpKDFMbC6ZznBZPkkY/1551177212/sites/default/files/inline-images/AD.jpg)
நள்ளிரவில் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ! புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி ! தரமான சம்பவம் ! என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.