Skip to main content

கேரளாவை அலறவிட்ட கொள்ளையர்கள்; தமிழக காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Tamil Nadu police arrested the robbers in Kerala

 

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டறை சுரேஷ் (30). தூத்துக்குடியின் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ் (34). இருவரும் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பைக் ஒன்றை திருடியுள்ளனராம். பின்னர், பாரிப்பள்ளியிலுள்ள வீட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், சாத்தனூர் காவல் நிலையம் அருகே உள்ள கனகமந்திரிலிருக்கும் ஷியாம்ராஜ் என்பவரின் வீட்டை உடைத்து அலமாரியிலிருந்த ரூ. 3.75 லட்சம் மற்றும் மூன்றரை பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம்.

 

ஷ்யாம்ராஜ் தன் மனைவி பணிபுரியும் இடத்திலிருந்து வீடு திரும்பும் போது வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமாகக் காணப்பட்ட இருவரை புகைப்படமெடுத்துள்ளளார். மேலும், அவர் வீடு வந்து பார்த்ததில் வீட்டின் முன் ஒருவர் பைக்கில் செல்வதையும், மற்றொருவர் வீடு முன்னே உள்ள பார்க்கிங்கில் நடந்து செல்வதைப் பார்த்தவர், யார் என்று அவர்களைக் கேட்க, அவர்களோ தண்ணீர் குடிக்க வந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். மேலும், அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடப்பதால் அத்தொழிலாளர்கள் என நினைத்து சந்தேகப்படவில்லையாம். ஆனால், அதன் பிறகே தனது வீடு கோடாரியால் உடைக்கப்பட்டு கட்டுமான நிறுவனப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு பதறியவர் ஆதாரத்துடன் புகார் கொடுத்திருக்கிறார்.

 

Tamil Nadu police arrested the robbers in Kerala

 

இதையடுத்து, அப்பகுதியில் கவிதா என்பவரின் வீடும் உடைக்கப்பட்டு அலமாரியிலிருந்த ஏழரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. தவிர அங்குள்ள இரண்டு நாய்கள் மயங்கிக் கிடந்ததால் அவைகளுக்கு உணவில் மயக்கமருந்து கொடுத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கேரள போலீசார் சந்தேகித்தனர்.

 

இதைத்தொடர்ந்து, சிக்காமல் போன கொள்ளையர்கள் தமிழகம் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சி.சி.டி.வி. ஆதாரம் மற்றும் புகைப்படங்களை தமிழகப் போலீசாருக்கு கேரள போலீசார் அனுப்பி உஷார் படுத்தியிருக்கிறார்கள். இதனிடையே, தென்காசி மாவட்டத்தின் கேரள எல்லையான புளியரை எல்லையில் எஸ்.ஐ. வெள்ளத்துரை மற்றும் மாரிராஜ், பொன்ராஜ் உள்ளிட்ட போலீசார் பைக் மற்றும் பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் பொருட்டு கொல்லம் – தென்காசி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.

 

நேற்று மாலை 4 மணியளவில் வந்த அந்தப் பேருந்தைச் சோதனையிட்டனர். அது சமயம் பயணிகளோடு பயணிகளாக இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 350 ரூபாய், 36 கிராம் தங்க நகை, 178 கிராம் கவரிங் நகை மற்றும் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கத்தி, கடப்பாரை, கம்பி போன்றவைகளைப் பறிமுதல் செய்து அவர்களையும் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.