Skip to main content

சிவகாசி ரத்த வங்கியில் ஆய்வு!!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

 

sivakasi

 

சிவகாசி மருத்துவமனை ரத்த வங்கியில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பட்டு திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

 

அரசு மருத்துவமனையின்  தவறால், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கர்ப்பிணி முத்து, தனக்கு தீங்கிழைத்த அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சிவகாசி மருத்துவமனை ரத்த வங்கியில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பட்டு திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்