Skip to main content

மாணவர்கள் போராட்டம் எதிரொலி! சித்த மருத்துவக்கல்லூரி மூடல்!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018
 Students struggle echo! shidda medical  college closure!

 

நெல்லையிலுள்ள பாளையில் அரசு சித்த ஆயுர்வதே மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவப்படிப்பிற்காக ஆண்டு தோறும், சுமார் 100 மாணவ மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். அதே சமயம் சித்தவைத்தியம் நாடி வருகிற நோயளிகளுக்கு சிகிச்சை வசதி மற்றும் படுக்கை வசதியும் உடைத்தானது அந்தக் கல்லூரி.

 

இங்கு பயிலவரும் மாணவர்களுக்கு அங்கு விடுதியும் உண்டு. ஆனால் பழமை வாய்ந்த அந்த விடுதி பழுதடைத்துள்ளது. ஆனால் இங்கு ஆறு ஆண்டுகளாக இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே ஒரு சில அறைகள் ஒதுக்கப்பட்டன. மேலும் அந்த விடுதி செப்பனிடுவதற்கு நான்கு கோடியும் ஒதுக்கப்பட்டது. பணியின் பொருட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டும் பணிகள் நடக்காமலிருந்தது. இதனால் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள் தங்களுக்கு உணவகத்துடன் கூடிய விடுதி வசதியை ஏற்படுத்த வலியுறுத்தி கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்ப போராட்டம் நடத்தினர். இதையடுத்து நிர்வாகம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் மாணவர்கள் தங்களுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்தால் ஏற்றுக் கொள்வுதாக தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொண்ப்படாததால், போராட்டம் தெர்டர்ந்த நிலையில் சித்தா கல்லூரி காலவரையரை யின்றி மூடப்படுவதாக முதல்வர் நீலாவதி அறிவித்தார். இதையடுத்து மாணவர்களின் இரண்டு விடுதிகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்