Skip to main content

நின்றுபோன திருமணம்... ஏழு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மணமகன் புகார்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Stopped marriage ... Groom complains for seven lakh compensation

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கடம்புலியூர் கிராமம். அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் தனது தோழிகளுடன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரியில் நடனமாடினார். இதனால் கோபமுற்ற மணமகன் மணப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு கோபித்துக்கொண்ட மணப்பெண் மணமகனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். இதனால் கடந்த 19ஆம் தேதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்று போனது. இதனால் மணமகன் வீட்டார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

 

இந்த நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த செஞ்சியைச் சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரை மணமகனாகத் தேர்ந்தெடுத்து உடனடியாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமகளின் கன்னத்தில் அறைந்த மாப்பிள்ளை, திருமணம் நின்றுபோன கோபத்தில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் திருமண வரவேற்பு விழாவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரியின் போது என்னையும் அந்த பெண்ணையும் சேர்ந்து நடனமாடச் சொல்லி வற்புறுத்தினார்கள். அப்போது நடனமாட எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டேன். ஆனால் அந்தப் பெண்ணின் கையை பிடித்து கொண்டு வேறு ஒருவர் நடனம் ஆடினார். இப்படி மற்றவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடலாமா?

 

இது தவறு என்று சுட்டிக் காட்டியதற்காக அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் என்னை அடித்தார்கள். இதனால் திருமணம் நின்று போனது. நானும் எனது குடும்பத்தினரும் அவமானப்படுத்தப்பட்டு, வேதனை அடைந்தோம். திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. தற்போது எனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு நஷ்ட ஈடாக ஏழு லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும். மேலும் என்னை ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.