Skip to main content

தலையில் உதயசூரியன், கனிமொழி என்ற சிகை அலங்காரம்: வாக்கு சேகரிக்க தூத்துக்குடி சென்ற திருச்சி வழக்கறிஞர்

Published on 07/04/2019 | Edited on 07/04/2019

திருச்சி மாவட்டம் சீமாணுர் பகுதியை சேர்ந்தவர் பொறியாளர் கோபிநாத். தற்போது சட்டமும் பயின்றுள்ளார். கடந்த ஆண்டு காவிரி மீட்பு போராட்டத்தின் போது போராட்டக் கொடியுடன் போராட்டக் களத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தி.மு.க ஒ.செ சீமானூர் பிரபு வின் உறவினர்.

 

dmk supporter

 

dmk supporter

 

கனிமொழி மீது அதிக பற்றுக் கொண்டவராக இருப்பதால் கனிமொழிக்கு ஆதரவாக  சமூக வலைதளங்களில் பதிவுகள் போடுபவர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கனிமொழி ஆதரவாளர்கள் தூத்துக்குடிக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதேபோல பொறியாளரும், வழக்கறிஞருமான தங்க.கோபிநாத் தன் பின்னந்தலையில் உதயசூரியன் படத்துடன் கனிமொழி என்று ஆங்கிலத்தில் எழுத்துகளாக சிகை அலங்காரம் செய்து கொண்டு திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். 

 

dmk supporter

 

தங்க கோபிநாத்தின் சிகை அலங்காரத்தை கனிமொழியும் பார்த்துள்ளார். திருச்சியில் இருந்து தனது குழுவினருடன் தூத்துக்குடி சென்றுள்ள தங்க.கோபிநாத் தூத்துக்குடியில் திரேஸ்புரம், முத்தரையர் நகர் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்