Skip to main content

தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை, காலை 9 மணிக்கு தொடங்கியது.
 

நிருபர்கள், கேமரா மேன்களை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அங்கிருக்கும் நிருபர்கள் கூறுகையில், எங்களை தனியாக அறை கொடுத்து அமரவைத்தனர். வீடியோ கேமராக்கள் இரண்டு நிமிடம், போட்டோக்கிராப்பர்கள் இரண்டு நிமிடம் மட்டுமே படம் எடுக்க அனுமதித்தனர். நிருபர்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டிவிட்டு வெளியே அழைத்து வந்தனர். 3 மணி நேரமாகியும் தபால் வாக்கு எண்ணிக்கை விவரம் தெரிவிக்கப்படவில்லை. எந்த நிலவரமும் தெரியாததால் நிருபர்கள் உள்ளனர்.

 

 

நாங்க என்ன டிபன் சாப்பிடவும், டீ குடிக்கவுமா வந்தோம். லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியில் எல்லா வசதிகளும் செய்து கொடுத்துள்ளனர். இங்கு மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை. எங்களை உள்ளேவிட தான் பாஸ் கொடுத்துள்ளார்கள். இந்த பாஸ் கொடுத்திருக்கிறார்கள் என காட்டினாலும் அனுமதிக்கவில்லை. அடையாறு துணை கமிசனர் பத்திரிகையார்களை சமாதானப்படுத்தி அனுப்புகிறார். எப்படி போராடினாலும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஏ.பி.ஆர்.ஓ. அலுவலர்தான் நான்கு சுற்று முடிவு என ஜெராக்ஸ் காப்பியை கொடுக்கிறார். மேலும் வாக்கு எண்ணிக்கை மிகவும் மந்தநிலையில் செல்கிறது எனவும் குற்றச்சாட்டியுள்ளனர். 
 

இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

தென்சென்னை நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம்! (படங்கள்)

Published on 04/04/2024 | Edited on 04/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர். மருத்துவர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிபேட்டையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்