Skip to main content

ரேசன் கடையிலிருந்தே அரிசி மூட்டைகள் கடத்தல்! -விரட்டிச் சென்று லாரியை மடக்கிய சாத்தூர் காவல்துறையினர்! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Smuggling of rice bundles from the ration shop! -Sattur police chase and turn over lorry!

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து பொது விநியோகம் செய்வதன் மூலம்,  நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் பொதுமக்கள் வாங்குகின்றனர். உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுத்திவரும் இந்த ரேசன் திட்டத்தைச் சீர்குலைக்கும் விதமாக, விஷமிகள் கடத்தலுக்குப் பயன்படுத்துவது தொடர்ந்து நடக்கிறது.  அதனால், ஒரு வழக்கு விசாரணையின்போது, தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளரிடம் சில கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டது, சென்னை உயர்நீதிமன்றம்.  

 

பொதுமக்களுக்கு அனுப்பப்படும் இலவச அரிசியில் முறைகேடு செய்ததாக எத்தனை அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது? அப்படி பதிவு செய்து இருந்தால் யார்  மீது பதிவு செய்யப்பட்டது?

 

ரேசன் அரிசி முறையாக விநியோகிக்கப்படுகிறதா அல்லது கையாடல் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் நடைமுறைகள் உள்ளனவா?

 

இலவச அரிசி பெறுபவர்கள் முழுமையாகப் பயன்படுத்துகிறார்களா அல்லது அவர்களும் கையாடலுக்குத் துணைபோகிறார்களா?  அப்படி துணைபோனால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

 

Smuggling of rice bundles from the ration shop! -Sattur police chase and turn over lorry!

 

கடந்த பத்தாண்டுகளில்  அரிசி கடத்திய புகாரில் குண்டர் சட்டத்தில் ஒரு முறைக்கு மேல் எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்?

 

உயர்நீதிமன்றம் இந்த அளவுக்குச் சாட்டையைச் சுழற்றியும், தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் நின்றபாடில்லை. தற்போது,  சாத்தூர் அருகே நடந்த கடத்தல் இது, "சாத்தூர் காவல்துறையினருக்கு ரேசன் அரிசி கடத்தல் குறித்து ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சாத்தூர்- கோவில்பட்டி நெடுஞ்சாலை- படந்தால் விலக்கு அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியை போலீசார் நிறுத்த முயற்சிக்க, அதன் டிரைவர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுவிட, போலீசார் விரட்ட, பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகில் அந்த லாரியை நிறுத்திவிட்டு, டிரைவரும் க்ளீனரும் தப்பிவிட்டனர். 

 

அந்த லாரியில் சுமார் 20 டன் எடையுள்ள 400 மூட்டை ரேசன் அரிசி இருந்தது. லாரியையும் கடத்திவரப்பட்ட ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், உணவு கடத்தல் தடுப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஒப்படைத்தனர். ரேசன் கடையிலிருந்து நேரடியாகவே அரிசி மூட்டைகளைக் கடத்தியது குறித்த விசாரணை நடந்துவருகிறது.
   

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.