Skip to main content

’என் வாழ்நாள் பாடங்களாக கருதி அன்றாடம் நான் வாசித்து வரும் நூல்கள்’ - மனம் திறக்கும் சீமான் 

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
ச்

 

பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன்  மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’மாபெரும் தமிழறிஞரும், தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளங்களுள் ஒருவருமான பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன்  காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவருடைய இழப்பு தமிழ்த் தேசிய இன வரலாற்றில் எதனாலும் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

 

திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடியில் 1941 ஆம் வருடம் பிறந்த ஐயா அறவாணன்  திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராகவும் , இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளராகவும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மன்றத்தின் பெருமைமிக்க வாழ்நாள் உறுப்பினராகவும் திகழ்ந்தவர். பல்கலைக்கழகங்களை சார்ந்த உயரிய பதவிகளில் அமர்ந்து பெருமை சேர்த்த அவர் தமிழ் மொழியின் செழுமைக்கும் அதன் வளர்ச்சிக்கும் தன் வாழ்நாள் முழுக்க உழைத்தவர்.

 

தமிழின வரலாறு, மானுடவியல் கல்வியியல், சமூகவியல் போன்ற பல்வேறு தளங்களில் புகழ் வாய்ந்த 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உலகப்புகழ் பெற்றவர். அவருடைய தொல்காப்பியக் களஞ்சியம்,ஈழ விடுதலையை குறித்த தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு உள்ளிட்ட பல நூல்கள் தமிழினத்தின் மேன்மைக்காக அவர் அளித்த மாபெரும் வரலாற்றுக் கொடை.

 

அவருடைய தமிழன் அடிமையானது ஏன் , எவ்வாறு..?, தமிழர்கள் மேல் நடந்த பண்பாட்டு படையெடுப்புகள் ஆகிய நூல்களை என் வாழ்நாள் பாடங்களாக கருதி அன்றாடம் நான் வாசித்து வருகிறேன். தன் வாழ்நாளில் தமிழினம் முன்னேற எழுதியும் உழைத்தும் வந்திருக்கிற அவர் தமிழ் முறைப்படி பல இளைஞர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்து மாபெரும் முன்னோடியாக திகழ்ந்தார்.

 

பேராசிரியராக, பதிப்பாசிரியராக ,வரலாற்று ஆய்வாளராக, இதழாசிரியராக, கருத்தாளராக தமிழினத்தின் தத்துவ நெறியாளராக என பல்வேறு துறைகளில் ஐயா அறவாணன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு தனி முத்திரை பதித்தவர். அவர் எழுதிய பல நூல்களுக்கு பல்வேறு உயரிய விருதுகளும், மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நூல் ஆசிரியருக்கான விருதுகளும் கிடைத்தன. 1986 வருடம் சிறந்த ஆசிரியருக்கான கல்வியியல் விருது ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

தன் வாழ்நாள் முழுக்க தமிழினத்தின் உயர்விற்காக உழைத்த மதிப்பிற்குரிய ஐயா அறவாணன் அவர்கள் தமிழ் தேசிய இன வரலாற்றில் என்றென்றும் நினைவு கூறத்தக்க ஆகச் சிறந்த ஆளுமையாக திகழ்வார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழின அறிவுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   மறைந்த பெருந்தமிழர் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்’’என்று கூறப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்