Skip to main content

காதல் ஜோடி சயனைட் சாக்லெட் தின்று தற்கொலை! விரிவான தகவல்கள்!!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சேலத்தில் இளம் காதல் ஜோடி சயனைட் கலந்த சாக்லெட் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்2 வரை படித்துள்ள சுரேஷ், தந்தையுடன் சேர்ந்து வெள்ளி கொலுசுகளுக்குத் தேவையான ஜால்ரா தயாரிக்கும் வேலைகளை கவனித்து வந்தார். 

salem lovers incident police investigation



செவ்வாய்க்கிழமை (அக். 8) மதியம் ஒரு மணியளவில், வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற சுரேஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கே சென்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பி விடுவதை வழக்கமாக வைத்திருந்த சுரேஷ், வெகுநேரமாக வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் பதற்றம் அடைந்தனர்.


பல இடங்களிலும் மகனைத் தேடி அலைந்தனர். நண்பர்கள் வீடுகளிலும் விசாரித்தனர். இந்நிலையில், இரவு 11 மணியளவில், சேலம் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே, கோபிக்குச் சொந்தமான கார் ஷெட் முன்பு, சுரேஷ் ஓட்டிச்செல்லும் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில் கார் ஷெட்டை திறந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவருமே அரைகுறை ஆடையில் கிடந்தனர். இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 


இதுகுறித்து சுரேஷின் பெற்றோர் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர்கள் சுந்தராம்பாள் (செவ்வாய்பேட்டை), சரவணன் (சேலம் நகரம்) மற்றும் காவலர்கள் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். உடற்கூறாய்வுக்காக சடலங்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

salem lovers incident police investigation



சுரேஷ் அருகே சடலமாகக் கிடந்த இளம்பெண், சேலம் குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி மகள் ஜோதிகா (20) என்பதும், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.  சுரேஷூம், ஜோதிகாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், சுரேஷ் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரளவுக்கு ஜோதிகாவின் குடும்பம் வசதி இல்லாததால், சுரேஷின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.


இந்த நிலையில்தான் காதலர்கள் தற்கொலை முடிவை எடுத்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் கருதுகின்றனர். சடலம் கிடந்த காரின் பின்னிருக்கையில் சில சாக்லெட்டுகள் சிதறிக்கிடந்தன. சடலங்கள் கைப்பற்றப்படும் வரை காரின் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. இருக்கையில் ரத்தமும் தோய்ந்து இருந்தது. அவர்கள் இருவரும் சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.  

salem lovers incident police investigation



அரை நிர்வாணமாகக் கிடந்ததை வைத்து பார்க்கையில் தற்கொலை முடிவெடுப்பதற்கு முன்பாக அவர்கள் உடலுறவு கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். எனினும், உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டது சயனைடா அல்லது வேறு ஏதேனும் விஷமா? அவர்கள் உடலுறவு கொண்டிருந்தார்களா உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும். இப்போதைக்கு உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் அளித்துள்ள கிளியரன்ஸ் சான்றிதழில், காதலர்களின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை குறிப்பிடவில்லை. சந்தேகம் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. 


அதேநேரம், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில், இந்த சம்பவத்தை தற்கொலை என்றே எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். காதலர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டிருக்கலாம் அல்லது கண்காணா இடத்திற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கூப்பிடு தொலைவுக்குள் எதற்காக காதலர்கள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டும் என்ற சந்தேகத்தையும் பலர் தரப்பிலும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.