Skip to main content

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு; பி.இ., பட்டதாரி கைது!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

சேலம் மரவனேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) ஒரு மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை கத்தி முனையில் பறித்துச்சென்றார். நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பிச்செல்லும்போது, மூதாட்டி கூச்சல் போட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, அந்தப்பகுதியில் சென்றவர்கள் மர்ம நபரை மடக்கிப்பிடித்து, அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

salem district old women chain thief be graduate police arrested

விசாரணையில், அந்த மர்ம நபர், சேலம் எருமாபாளையத்தைச் சேர்ந்த ஞானசேகர் (23) என்பதும், பி.இ., பட்டதாரி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் ஞானசேகர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சார்ந்த செய்திகள்