Skip to main content

சேலம்: பாலியல் வழக்கில் சிக்கிய விசிக பிரமுகருக்கு 7 நாள் போலீஸ் காவல்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

சேலத்தில், ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியை காவல்துறையினர் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். இவர் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு வரவழைத்து, அவரை தாக்கியும், மிரட்டியும் பாலியல் வல்லுறவு கொள்ளும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த மாதம் பரவியது.

 

vck

 

மேலும், அவர் பல பெண்களை மிரட்டியே பாலியல் வல்லுறவு கொண்டதாகவும், அந்தக்காட்சிகளை வீடியோவாக படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டி அச்சுறுத்தி குறிப்பிட்ட சில பெண்களுடன் அடிக்கடி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோமோசெக்ஸ் புகாரின்பேரில் மகுடஞ்சாவடி காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்தனர்.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் பரவிய ஆபாச வீடியோவில் பதிவு செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாநகர காவல்துறை எல்லைக்குள் நடந்ததால், அந்த வழக்கு மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் இருந்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மோகன்ராஜ் பாலியல் வல்லுறவு கொண்டதாக சொல்லப்பட்ட மேகலா (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை தேடிப்பிடித்த காவல்துறையினர், அவரிடம் இருந்து எழுத்து மூலம் புகாரைப் பெற்றனர்.

 

vck

 

அந்தப் புகாரில் மேகலா, ''நான் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதனால் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், வறுமை காரணமாக குடும்பச் செலவுகளுக்காக மோகன்ராஜிடம் 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அந்தப்பணத்தை குறிப்பிட்ட தேதியில் தர முடியாமல் தாமதம் ஆனது. ஒருநாள் என்னை தன் வீட்டுக்கு அழைத்த மோகன்ராஜ், 2 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பித்தர தாமதம் ஆனதைச் சுட்டிக்காட்டி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீடியோவை பொதுவெளியில் பரப்பி விடுவேன் என்று சொல்லி அடிக்கடி என்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டார்,'' என்று கூறியிருந்தார்.

மேகலா அளித்த புகாரின்பேரில், மோகன்ராஜ் மீது பாலியல் வல்லுறவு, தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுதல் மற்றும் சைபர் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தது. ஏற்கனவே ஹோமோசெக்ஸ் புகாரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மோகன்ராஜை மேகலாவின் புகாரின்பேரிலும் கைது செய்தனர்.

 

vck

 

இந்நிலையில்தான், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி, சேலம் மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, வெள்ளிக்கிழமை (அக். 11) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் செந்தில்குமார், பாலியல் புகாரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மோகன்ராஜை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து மோகன்ராஜை காவலில் எடுத்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.