Skip to main content

சுகாதரத்துறை துணை இயக்குனரகம் இடமாற்றம்; அனைத்துக் கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

Relocation of Deputy Directorate of Health; Demonstration by all parties

 

நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிவினைக்கு முன்பாக முதன்மை நகரமான சங்கரன்கோவிலில் செயல்பட்டுவந்தது சுகாதரத்துறையின் துணை இயக்குனரகம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் ஒருங்கிணைந்திருந்த காலத்திலிருந்தே இந்த இயக்குனரகம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார நகரங்களின் தொழில் நிமித்தம் செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள் செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று சுமார் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இந்தத் துணை இயக்குனரகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
 

தவிர விவசாயம், விசைத்தறி தனியார் பள்ளிகள், சிறு குறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தொழில் நிமித்தமாக தேவையான சுகாதாரச் சான்றிதழ்களைப் பெற்று பயனடைந்து வந்தனர். நகரிலேயே இந்த அலுவலகம் இருப்பதால் அதிகாரிகள் தாமதமின்றி ஆய்வுசெய்யும் பணியும் சீராக நடந்து வந்திருக்கிறது.

 

தற்போது, சங்கரன்கோவில் நெல்லையிலிருந்து தென்காசியோடு இணைக்கப்பட்டுவிட்டதால், தென்காசி தலைமையிடத்தில் ஏற்கனவே சுகாதாரத் துறையின் இயக்குனரகம் இருந்தும் சங்கரன்கோவில் துணை இயக்குனரகம் தென்காசி மாற்றப்படுவதை அறிந்த நகர தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் ஆட்சேபனை தெரிவித்தன.

 

அதிகாரிகளின் இச்செயலையும் இயக்குனரகம் மாற்றப்படுவதையும் கண்டித்து சங்கரன்கோவிலில், நேற்றிரவு தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

நகரின் தி.மு.க பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான தங்கவேலுவின் தலைமையில் தி.மு.க நகரச் செயலர் சங்கரன் முன்னிலையில் ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வின் ஆறுமுகச்சாமி, சி.பி.எம்.மின் முத்துப்பாண்டி, அசோக்குமார், சி.பி.ஐ.யின் குருசாமி காங்கிரஸ் கட்சியின் உமாசங்கர், ஃபார்வர்டு பிளாக் கட்சி, வி.சி.க., த.ம.மு.க., மனிதநேய கட்சி மற்றும் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

Ad

 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், சுகாதார துணை இயக்குனரகம் மாற்றப்படுவதால் நகரம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் நகர மக்கள் பாதிக்கப்படுவதோடு, இயக்குனரகத்தின் பணியாளர்களும் பயண நெருக்கடிக்குள்ளாக நேரிடும். மக்களுக்கான இந்த இயக்குனரகம் தென்காசிக்கு மாற்றப்படுவதை உள்ளூர் அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Tamil Nadu MPs meet with the Union Minister!

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவைத் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதி மணி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் இன்று (01.07.2024) சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

மத்திய அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில், “திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டிடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தது. கூடுதல் பயணிகளின் வருகைக்காகவே இந்தப் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கூடுதல் விமானச் சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்குத் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கத் தேவையான நிதியை வழங்க வேண்டும். 

இரண்டாவதாக, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின்படி (BASA), திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானச் சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிகமாக உள்ளது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூர், சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானச் சேவையைப் பயன்படுத்துகின்றன. இதனால், திருச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய வருவாய் பெங்களூர், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்குச் சென்று விடுகின்றன.

எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குக் கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும். அதேபோல, திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானச் சேவை இல்லை. ஆகவே, டெல்லியில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொச்சினுக்கும் விமானங்களை இயக்கிட வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்ட மக்களுக்கும் பெரும் பயன் விளைவிப்பதாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu MPs meet with the Union Minister!

மேலும் இந்த சந்திப்பு தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி.,“மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவின் தந்தை மறைந்த  கிஞ்சராபு எர்ரான் நாயுடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நெருங்கிய நண்பர் ஆவார். அமைச்சர் ராம்மோகன் நாயுடு, வைகோவின் உடல் நலத்தை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார். அதோடு வைகோ டெல்லிக்கு வரும்போது நேரில் வந்து சந்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளைக் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாகவும் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதியளித்தார்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆடு திருட்டில் முன்விரோதம்; அதிமுக நிர்வாகி கொலையில் திடுக்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                           கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி  புஷ்பநாதன்   

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆலை காலனி பகுதியை சேர்ந்த நேதாஜி, அதே பகுதியைச் சேர்ந்த அஜய் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மூவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில், ஆடுகளை திருடி, அந்த பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகி புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு ஆடுகளை தன்னுடைய கசாப்பு கடைக்காக வாங்கி வந்த புஷ்பநாதனிடம் திருடப்பட்டு வந்த ஆடுகளை தொடர்ந்து விற்று வந்தனர். இந்நிலையில் நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேரும் தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் எட்டு ஆடுகளை திருடியுள்ளனர். இது குறித்த வழக்கில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                            கைது செய்யப்பட்ட சந்தோஷ், அஜய், நேதாஜி 

ஆடு திருட அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்களிடமிருந்து ஆடுகளை வாங்கிய புஷ்பநாதன் தங்கள் 3 பேரையும் ஜாமீன் எடுப்பார், வாகனத்தையும் போலீசிடம் இருந்து மீட்டர் தருவார் என மூன்று பேரும் நினைத்திருந்தனர். ஆனால் புஷ்பநாதன் அவ்வாறு செய்யாததால் புஷ்பநாதனுக்கும் மூன்று இளைஞர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்தவர்கள் இது குறித்து புஷ்பநாதனை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில் மது போதையிலிருந்த மூன்று பேரும் புஷ்பநாதனை வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது