Skip to main content

தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்..! அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021


 

Public road blockade on National Highway

 

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பரசம்பேட்டை பகுதியில் சாலை பணிகள் நடைப்பெற்று வருகிறது. அதனால் அடிக்கடி அங்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விநியோகம் அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது. 

 

இந்நிலையில், மீண்டும் சாலை அமைக்கும் பணியின்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே உடனடியாக தங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். சாலை பணியின்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பரசம்பேட்டை பகுதியில், அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

உடனடியாக மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்தப் போராட்டத்தால் சுமார் ஒருமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்