Skip to main content

மோடிக்கு காது கேட்கலயா... கை தட்டி ஓசை எழுப்பும் தமிழக விவசாயிகள்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018
p.r.pondiyan 601.jpg


 

காவிரி மேலண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் கொடுத்த காலம் இன்றோடு முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் இன்று நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளனர் தமிழக விவசாயிகள். 

இன்று 4 வது நாள் போராட்டத்தில் இத்தனை நாள் காத்திருந்தும் எங்கள் குரல் கேட்கலயா... மோடிக்கு காது கேட்கலயா... என்று தங்கள் கோரிக்கைகளை கை தட்டி ஓசை எழுப்பி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்