Skip to main content

குளங்கள் நிரம்பியது... முயற்சித்த இளைஞர்களின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்தது! 

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால் என்று நீர்நிலைகள் பல ஆண்டுகுளாக சீரமைக்க தவறவிட்டதால் மழைத் தண்ணீரை சேமிக்க முடியாமல் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்றுவிட்டது. மற்றொரு பக்கம் தண்ணீரை சேமித்து வைக்கும் ஆற்று மணலை கொள்ளைக் கும்பல் பங்குபோட்டு அள்ளிவிட்டதாலும் இன்று குடிதண்ணீருக்கு குடங்களை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

 

 The pools are filled


இந்தநிலையில்தான் வெளிநாடு, வெளியூர்களுக்கு வேலைக்காகவும், தொழில் செய்யவும் சென்ற இளைஞர்கள், சொந்த ஊர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தார்கள். சொந்த ஊரில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து மீண்டும் நிலத்தடி நீரை மீட்போம் என்று சபதம் எடுத்தனர். பலர் தங்கள் வேலைகளை உதறிவிட்டு சொந்த ஊருக்கு வந்தார்கள். சிலர் பணி செய்யும் இடத்தில் இருந்தே நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடர்ந்தனர்.

 

 The pools are filled

 

தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உயிர் துளியாக தொடங்கிய நீர்நிலை மீட்பு பணி அடுத்து ஒவ்வொரு கிராமமாக பரவியது. கைஃபா என்ற அமைப்பு உருவாகி 560 ஏக்கர் பரப்பளவுள்ள பேராவூரணி பெரிய குளத்தை மீட்டார்கள். தண்ணீரை நிறைத்தார்கள். ஒட்டங்காட்டில் கலாம் நற்பணி மன்றத்தினர் பெரிய குளத்தை மீட்டார்கள். கொத்தமங்கலத்தில் இளைஞர் மன்றத்தினர் பல குளங்களை மீட்டனர்.

ஏம்பல் கிராமத்தில் முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் சங்கம் உருவாகி பல்வேறு தடைகளைத் தாண்டி இதுவரை 8 குளங்களையும் அதற்கான வரத்து வாய்க்கால்களையும் மீட்டதுடன் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். சீரமைக்கப்பட்ட குளங்களில் தண்ணீர் நிரம்புவதைப் பார்த்து ஆனந்தமடைந்து அடுத்தடுத்த குளங்களையும் சீரமைக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளனர்.

 

 The pools are filled

 

பசுமையான விவசாய கிராமமான மறமடக்கியில் பல வருடங்களாக நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்றதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மாற்று வேலைகளுக்கு செல்லத் தொடங்கினார்கள். இந்தநிலையை பார்த்த இளைஞர்கள் மக்கள் செயல் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தங்கள் பங்களிப்போடு உதவி செய்ய முன் வந்தவர்களின் உதவிகளையும் பெற்று தூர்வாரத் தொடங்கினார்கள். 27 நாட்கள் கடும் உழைப்பிற்கு பிறகு பெய்த மழையில் குளம் பாதி நிறைந்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இதைப் பார்க்கும் போது மற்ற குளங்களையும் சீரமைத்து விரைவில் வறட்சியில்லாத கிராமமாக மறமடக்கியை மீட்போம் என்கிறார்கள் இளைஞர்கள்.

இந்த வரிசையில் நெடுவாசல், மாங்காடு, வடகாடு, செரியலூா், குருவிக்கரம்பை, நாடியம், மருங்கப்பள்ளம் என்று கிராமங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் பறவைகளுக்காக அடர்வனங்களும், கரைகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க பனை விதைகளையும் புதைத்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.